செய்திகள் :

US: ஈரான் அச்சுறுத்தல்; பாக்., ராணுவ தளபதிக்கு விருந்து.. ட்ரம்ப் வேலை பலிக்குமா?

post image

பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா கொடுத்த பதிலடி, இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதலை உருவாக்கியது.

இரு நாடுகளும் மே 10, 2025-ம் தேதி பேசி ஒரு முடிவுக்கு வர, தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. இதற்கு முன்பே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்திக்கொண்டு இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தார்.

மேலும், இரு நாடுகளிடமும் 'அமெரிக்கா உடனான வர்த்தகத்தைக் காட்டி' இந்த முடிவுக்கு வர வைத்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதல் நிறுத்தத்திற்கு காரணம் 'நான் தான்' என்று தொடர்ந்து கூறி வந்தார். இதை இந்திய அரசு மறுத்துள்ளது.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

அசிம் முனீருக்கு 'லன்ச்'

இந்த நிலையில், தாக்குதல், போர் நிறுத்தத்திற்கு பிறகு, முதல் முறையாக, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவிற்கு அரசு வழி பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15), அமெரிக்கா சென்ற அசிம் முனீருக்கு, இன்று அமெரிக்க நேரப்படி மதியம் ஒரு மணிக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருந்து தர உள்ளார்.

இதையடுத்து அசிம் முனீர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா - இஸ்ரேல்; பாகிஸ்தான் - ஈரான்!

இந்தச் சந்திப்பு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகான சந்திப்பு என்பதோடு மட்டுமல்லாமல், தற்போது இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் நடந்து வருவதாலும் முக்கியம் பெறுகிறது.

இந்தத் தாக்குதலில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் 'அமெரிக்கா படைகளுக்கு எதாவது ஆனால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்...', 'நிபந்தனையற்ற சரண்' என்று தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறார். இது இஸ்ரேலுக்கு ஒருவகையான ஆதரவாக ஆகிறது.

அசிம் முனீர்
அசிம் முனீர்

"இஸ்ரேல் எங்களுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், எங்கள் உதவிக்கு பாகிஸ்தான் வரும்" என்று ஈரான் கூறுகிறது.

ஆக, இஸ்ரேலின் பக்கம் அமெரிக்காவும், ஈரானின் பக்கம் பாகிஸ்தானும் நிற்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தான், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் அசிம் முனீர் சந்திப்பு நடக்க உள்ளது. 'இதன் விளைவு என்ன?' என்பது இன்று (அமெரிக்கா நேரப்படி) தெரியவரும்.

தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதில்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று (ஜூன் 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 2016 தேர்தலில் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியை அமைத்ததுப் போல இந்தத் தேர்தலில் விஜய்யை வைத்து ம... மேலும் பார்க்க

``44 டிகிரி வெயிலில் விளையும் ஆப்பிள்; ஏக்கருக்கு ரூ.5 லட்சம்..'' - விவரிக்கும் பொறியாளர்

எஞ்சினியர் டு விவசாயிமகாராஷ்டிரா விவசாயிகள் எப்போதும் விவசாயத்தில் புதுமையை புகுத்துவது வழக்கம். சோதனை அடிப்படையில் வெப்பமான பகுதியில் விளையாத பயிர்களைக்கூட தங்களது பகுதியில் விவசாயம் செய்து பார்ப்பது... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவு தூக்கத்தில் இழுத்துக்கொள்ளும் விரல்கள்; நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா?

Doctor Vikatan:இரவு தூங்கும்போது கால் விரல்கள் இழுத்துக்கொண்டு போவது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக, ஏசி போட்டாலோ குளிரான காலநிலையிலோ இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. அந்தப் பகுதியை நீவி விட்டால் வி... மேலும் பார்க்க

``சேது சமுத்திரத் திட்டத்தை போல கீழடி அறிக்கையில் வஞ்சிக்கிறார்கள்'' - திமுக ராஜீவ் காந்தி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில மாணவர் அணிச்செயலாளர் ராஜீவ் காந்தி, "உலகிலேயே நாகரீகத்தை மனிதன் கண்டுபிடித்ததற்கு அடையாளம் இரும்பு கண்டுபிடித்ததுதான். அதன்படி சுமார் 5300 ஆண்டுகளுக்கு மு... மேலும் பார்க்க

Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன?

கோடைக்காலங்களில் இடுக்குத்தொடை பிரச்னை அதிகமாக ஏற்படும். தொடையும் அதையொட்டிய இடுக்குப்பகுதியும் உரசி உரசி அரிப்பு ஏற்படும். சொரிந்தால் புண்ணாகி விடும்; எரிச்சல் ஏற்படும்; நடப்பதற்கே சிரமமாக இருக்கும்.... மேலும் பார்க்க

``ஜூலை 9 புதுச்சேரியில் முழு பந்த்'' - அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிப்பு

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்த பந்த் போராட்டத்தை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி ... மேலும் பார்க்க