செய்திகள் :

China: ``கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி'' - சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்

post image

ஸ்நாக்ஸ் சாப்பிட்டால், கண்ணாடி பார்த்தால் அபராதம்

சீனாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் கண்ணாடி பார்ப்பது, சிற்றுண்டி சாப்பிடுவதற்கு அபராதம் விதிக்கப்படும் செய்தி பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட மான் வா ஹோல்டிங்ஸ் லிமிடெட் ( Man Wah Holdings Limited) என்ற நிறுவனத்தில் தான் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சோபாக்கள், மெத்தைகள் போன்றவை விற்பனை செய்யும் நிறுவனம்தான் மான் வா ஹோல்டிங்ஸ் லிமிடெட்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், மான் வா ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகி லியு கடுமையான விதிகளை அமல்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஊழியர்கள் கழிப்பறையில் அதிக நேரம் செலவு செய்கிறார்கள், கண்ணாடி பார்க்கிறார்கள், சிற்றுண்டி சாப்பிடுவதற்காக அதிக நேரம் செலவிடுகிறார்கள் என பல்வேறு காரணங்கள் காட்டி ஊழியர்களை கூடுதல் நேரம் பணி செய்ய அந்த நிறுவனர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

அபராதம் எவ்வளவு தெரியுமா?

மேலும் இதற்காக ஊழியர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விதிகளை ஏற்காத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அபராதம்

வேலை நேரத்தில் ஊழியர்கள் விளையாடுவதை கண்டால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

தகவலின்படி சிற்றுண்டி சாப்பிட்டால் மேலாளர்களுக்கு ரூ.23,981 (2,000 யுவான்), மேற்பார்வையாளர்களுக்கு ரூ.11,990 (1,000 யுவான்) மற்றும் உதவி மேலாளர்களுக்கு ரூ.5,995 (500 யுவான்) அபராதம் விதிக்கப்படும்.

சரியான காரணமின்றி மூன்று முறைக்கு மேல் பணியிடத்தில் இல்லாமல் இருப்பதற்கு ரூ.23,981 (2,000 யுவான்) சம்பளக் குறைவு ஏற்படும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது போன்ற விதிகளால் அந்த நிறுவனம் சர்ச்சை சிக்கியுள்ளது.

`பரோலில் திருமணம்; குழந்தை பெற சிறையில் இருந்து விந்து..' கேங்ஸ்டர் தம்பதியின் காதல் கதை

டெல்லியில் பெண் தாதாவாக இருப்பவர் அனுராதா செளதரி. இவர் எப்போதும் பாதுகாவலர்கள் துணையோடுதான் வலம் வருவார். இவர் மீது கொலை, கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் என ஏராளமான வழக்குகள் நிலுவைய... மேலும் பார்க்க

அகமதாபாத்: உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதி - இந்திய வம்சாவளி UAE மருத்துவர்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக மனம் வருந்தி, அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்.கடந்த வியாழன் அ... மேலும் பார்க்க

Iran: நேரடி ஒளிபரப்பின்போது நடந்த ஏவுகணைத் தாக்குதல்; அதிர்ந்து தீப்பற்றிய தொலைக்காட்சி ஸ்டுடியோ!

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஈரானும் - அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடந்தி வந்தது. ஈரான் அதன் அணுசக்தி திறனை வளர்ப்பதைத் தடுப்பதே நோக்கம் என அறிவித்த இஸ்ரேல், ஈரா... மேலும் பார்க்க

Plane Crash: DNA அடையாளம் மூலம் 80 உடல்கள் ஒப்படைப்பு.. விபத்து இடத்தில் தயாரிப்பாளர் மாயம்?

அகமதாபாத்தில் சர்தார்வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வ... மேலும் பார்க்க

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க