செய்திகள் :

DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

post image

"பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை அமைச்சர் நேருவைக் காவு கொடுத்திருக்கிறார்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் கே.என்.நேருவும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சமீபத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்கள்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தி.மு.க-விற்கு எதிரான வாக்குகளைச் சிதறச் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் கட்டிய மனக்கோட்டையைத் தகர்த்து வருகிறது அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி.

பல கட்சிகள் கூட்டணியில் சேரப் போகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதும் ஸ்டாலின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

வாக்குறுதிகளைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார் ஸ்டாலின்? நீட் தேர்வு இருக்காது என்று கூறி ஆட்சிக்கு வந்தீர்கள்? நேற்று முன்தினம் 5 வது முறையாக நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன, இதற்கு உங்கள் தலைவர் ஸ்டாலின் என்ன பதில் வைத்துள்ளார் நேரு அவர்களே? இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், நான்காண்டுகளாக திணறிக் கொண்டிருப்பது தி.மு.க-தானே?

எங்களுக்கு சீட் அதிகமாகக் கொடுக்க வேண்டும், தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிப்பதில்லை என்றெல்லாம் சொல்வது யார்? உங்கள் கூட்டணியில் உள்ள வி.சி.க, சி.பி.எம், த.வா.க போன்ற கட்சிகள்தான்.

கே.என்.நேரு, உதயநிதி

பெட்டியைப் பற்றி நகராட்சித்துறை அமைச்சராக இருக்கும் நேரு பெயரில் தி.மு.க அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.

கலெக்சன், கமிஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஸ்டாலின் மாடல் அரசு, எத்தனைப் பெட்டிகளை அள்ளி குவித்தது என்பதை நேரு சொல்லாவிடில், 2026 இல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் மக்கள் நிச்சயமாகத் தெரிந்து கொள்வார்கள்.

சமீபத்தில் ஈ.டி. விசாரணை வளையத்தில் நேருவின் மகனும், தம்பியும் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் எத்தனை தம்பிகள் சிக்குவார்களோ? எத்தனை தி.மு.க-வினர் கம்பி எண்ண போகிறார்களோ? என்ற மரண பீதியில் தி.மு.க உறைந்து போய் உள்ளதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த பயத்தை அப்படியே தொடருங்கள், 2026 களத்தில் சந்திப்போம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!

'ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது' - இது இஸ்ரேல்,3 ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்வைத்த குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) முதல், இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்ட இடங்க... மேலும் பார்க்க

Meta: ``வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்" - ஈரானின் முடிவும் மெட்டாவின் பதிலும்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் நமக்காக மிக மோசமான செயலை செய்கிறது" - ஈரானை எதிர்க்கும் ஜெர்மன் சான்சிலர்

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் ஜெர்மன் Ch... மேலும் பார்க்க

Pakistan: இஸ்ரேல் - ஈரான் மோதலால் அச்சத்துக்குள்ளாகும் பாகிஸ்தான்; அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், பல ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஈரானும் எதிர்த்தாக்குதலைக் கொடுத்துவருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலி... மேலும் பார்க்க

'திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது' - திருமா உடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன்

விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து திருமாவளவனிடம் கேட்டப்போது, "அதிமுக முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க

'மக்களை உளவு பார்க்கிறதா வாட்ஸ்ஆப்?' குற்றம்சாட்டும் ஈரான் - வாட்ஸ்ஆப்பின் ரியாக்‌ஷன் என்ன?

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு அதன் குடிமக்களிடம் வாட்ஸ்ஆப்பை அவர்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து டெலீட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் அர... மேலும் பார்க்க