செய்திகள் :

நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு, ஏ.சி. போட்டு ஓய்வு எடுத்து... திருடிச்சென்ற திருடர்கள்! | உ.பி ஷாக்

post image

திருட வருபவர்கள் சில நேரம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடர்கள் இரவு முழுக்க இருந்து சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு திருடி சென்றுள்ளனர்.

லக்னோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாபுல் சிங், தனது சிகிச்சைக்காக குடும்பத்தோடு டெல்லி சென்று இருந்தார். அவர் டெல்லி சென்று இருந்த நேரத்தில் லக்னோவில் உள்ள அவரது வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர். திருடர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

காலையில் வீடு திறந்து கிடந்ததை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ அனைத்தும் திறந்து கிடந்தது. உள்ளே இருந்த உடைகள் வீடு முழுக்க சிதறி கிடந்தது.

கிச்சனில் நூடுல்ஸ் பாக்கெட்

வீடு முழுக்க திருடர்கள் பணம், நகைகளை தேடியிருந்தனர். அதோடு போலீஸார் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு நூடுல்ஸ் காலி பாக்கெட்கள் கிடந்தது. அதோடு நூடுல்ஸ் சமையல் செய்து சாப்பிட்டு இருந்தனர். அவர்கள் மேகி தயாரித்த பாத்திரம் அப்படியே அடுப்பில் இருந்தது. சாப்பிட்ட தட்டு கூட அப்படியே இருந்தது.

சமையல் அறையில் தீப்பெட்டி, அடுப்பு பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மேலும் திருடர்கள் ஏ.சி போட்டு விடிய விடிய ஓய்வு எடுத்து விட்டு பொறுமையாக வீட்டில் கிடந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து வீட்டு உரிமையாளரான வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு போலீஸார் பேசினர். வங்கி அதிகாரி முன்னெச்சரிக்கையான வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை டெல்லி செல்லும் போது தன்னுடன் எடுத்து சென்று இருப்பது தெரிய வந்தது.

மேற்கொண்டு வீட்டில் இருந்து என்ன பொருட்கள் திருட்டு போனது என்ற விபரம் கிடைக்கவில்லை. வீட்டு உரிமையாளர் டெல்லியில் இருப்பதால் இன்னும் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். ஆனாலும் திருடர்களை கைது செய்ய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். எத்தனை திருடர்கள் வந்தனர் என்ற விபரமும் இன்னும் கிடைக்கவில்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஒடிசா கடற்கரையில் ஆண் நண்பர் கண்முன்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 மைனர் உட்பட 10 பேர் கைது

ஒடிசா கடற்கரையில் நடந்துள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள பெர்ஹாம்பூர் அருகில் இருக்கும் கோபால்பூர் கடற்கரைக்கு 20 வயது கல்லூரி மாணவியும், ... மேலும் பார்க்க

ஆண் நண்பரை தாக்கி இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், திருபுவனை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பணியை முடித்துவிட்டு, இ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்; 9 வயது மகன் கண் முன்னே நடந்த கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கெர்லி என்ற இடத்தில் வசித்து வந்தவர் வீரு என்ற மான் சிங். மான் சிங் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக அவரது மனைவி அனிதா தெரிவித்தார். ஆனால் மான் சிங் உடம... மேலும் பார்க்க

கோவை: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிவிட்டு... அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

கோவை, கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் கோயில் உள்ளது. அங்கு தினசரி பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலில் பூஜை முடிந்த பிறகு, வழக்கம் போல கோயிலை ... மேலும் பார்க்க

முத்திரைத்தாள் மோசடி: அதிமுக முன்னாள் MLA சாந்தி ராமு மீது 5 பிரிவுகளில் வழக்கு - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராமு. படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தே.மு.தி.க-வில் இணைந்து கட்சி பதவிகளை வகித்து வந்தார். சாந்தி ராமுபல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இர... மேலும் பார்க்க

சிவகங்கை: 6 பேர் உயிரிழந்த குவாரி.. `விதிகளை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டதால் ரூ.91 கோடி அபராதம்'

விதி மீறலால் 6 பேர் உயிரிழக்க காரணமான கல் குவாரி நிறுவனத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மேகா ப்ளூ மெட்டல் குவாரிசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்ல... மேலும் பார்க்க