செய்திகள் :

முத்திரைத்தாள் மோசடி: அதிமுக முன்னாள் MLA சாந்தி ராமு மீது 5 பிரிவுகளில் வழக்கு - என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராமு. படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தே.மு.தி.க-வில் இணைந்து கட்சி பதவிகளை வகித்து வந்தார்.

சாந்தி ராமு

பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க - வில் இணைத்துக் கொண்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் குன்னூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.

கோத்தகிரி அருகில் உள்ள கொணவக்கரை கிராமத்தைச் சேர்ந்த திலக் என்பவர் சாந்தி ராமு மற்றும் அவரின் உறவினர்கள் முத்திரைத் தாளில் போலி ஆவணங்களை இணைத்தும் தேதிகளில் திருத்தம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு மற்றும் அவரின் சகோதரர் ராஜன் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டோர்

சாந்தி ராமு

ஊட்டி முத்திரைத்தாள் விற்பனையாளர் கோஷி என்பவரிடம் கடந்த 2012 - ம் ஆண்டு பிப்ரவரி 8 மற்றும் 12 - ம் தேதிகளில் முத்திரைத் தாள்களை வாங்கி அந்த முத்திரைத்தாள்களில் உள்ள தேதியை மாற்றி திருத்தம் செய்தததும், அதே முத்திரைத்தாளில் போலியான ஆவணங்களைத் தயாரித்து இணைத்துப் பதிவு செய்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சாந்தி ராமு உள்ளிட்ட 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர், " சாந்தி ராமு முத்திரைத் தாள் மோசடியில் ஈடுபட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்தே மாவட்ட பதிவாளர் முன்னிலையில் விசாரணையும் நடத்தப்பட்டது. தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள முத்திரைத்தாள்கள் தேதிகள் மாற்றப்பட்டிருப்பது விசாரணை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

சாந்தி ராமு

அரசை ஏமாற்றி போலி முத்திரை தாள் பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் தேதியை திருத்தம் செய்து போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த ஆவணத்தை வைத்து பதிவு செய்த குற்றத்திற்காக சாந்தி ராமுவை முதன்மை குற்றவாளியாக இணைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாந்தி ராமு தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஆண் நண்பரை தாக்கி இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், திருபுவனை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பணியை முடித்துவிட்டு, இ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்; 9 வயது மகன் கண் முன்னே நடந்த கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கெர்லி என்ற இடத்தில் வசித்து வந்தவர் வீரு என்ற மான் சிங். மான் சிங் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக அவரது மனைவி அனிதா தெரிவித்தார். ஆனால் மான் சிங் உடம... மேலும் பார்க்க

நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு, ஏ.சி. போட்டு ஓய்வு எடுத்து... திருடிச்சென்ற திருடர்கள்! | உ.பி ஷாக்

திருட வருபவர்கள் சில நேரம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடர்கள் இரவு முழுக்க இருந்து சமை... மேலும் பார்க்க

கோவை: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிவிட்டு... அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

கோவை, கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் கோயில் உள்ளது. அங்கு தினசரி பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலில் பூஜை முடிந்த பிறகு, வழக்கம் போல கோயிலை ... மேலும் பார்க்க

சிவகங்கை: 6 பேர் உயிரிழந்த குவாரி.. `விதிகளை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டதால் ரூ.91 கோடி அபராதம்'

விதி மீறலால் 6 பேர் உயிரிழக்க காரணமான கல் குவாரி நிறுவனத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மேகா ப்ளூ மெட்டல் குவாரிசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்ல... மேலும் பார்க்க

வீட்டில் புகுந்து சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்.. மடக்கிப் பிடித்த மக்கள், தப்ப விட்ட காவல்துறை?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில் உள்ள வீட்டில் அழகப்பன் (வயது 49) மற்றும் அவரது வயதான தாய் சொர்ணம் (75) ஆகியோர் வசித்து வருகின்றனர். அழகப்பன், ரியல் எஸ்டே... மேலும் பார்க்க