செய்திகள் :

வீட்டில் புகுந்து சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்.. மடக்கிப் பிடித்த மக்கள், தப்ப விட்ட காவல்துறை?

post image

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில் உள்ள வீட்டில் அழகப்பன் (வயது 49) மற்றும் அவரது வயதான தாய் சொர்ணம் (75) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

அழகப்பன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இரண்டு பேர் மட்டுமே தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று இரவு (16.06.2025) அவ்வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தின் வழியாக முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஆறு பேர் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் உள்ளே புகுந்து, வீட்டினர் யாரும் வருவார்களா என மறைந்திருந்துள்ளனர்.

அப்போது வெளியில் சென்று திரும்பிய அழகப்பன் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே வந்துள்ளார். அவரை மடக்கிப்பிடித்த ஆறு பேரும் அவரை அடித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்று, "உனது வீட்டில் 20 கோடி ரூபாய் பணம் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஒழுங்கு மரியாதையாக அந்தப் பணத்தை எங்களிடம் கொடுத்துவிடு" என கத்தியைக் கொண்டு இடது காலில் குத்தியும் வாயில் கிழித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

கொள்ளையர்கள் வீட்டில் பணம் இருக்கிறதா என தேடிய இடங்கள்
கொள்ளையர்கள் வீட்டில் பணம் இருக்கிறதா என தேடிய இடங்கள்

பின்னர் வீட்டில் இருந்த கழிவறை உள்பட அனைத்து அறைகளிலும் பணம் உள்ளதா? எனத் தேடி உள்ளனர். சத்தம் கேட்டு வீட்டின் மேல் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தாயார் சொர்ணம் கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து ஒருவன் மாடிக்குச் சென்று அவரை மாடிப்படி வழியாக தரதரவென இழுத்து வந்து தாய், மகன் இருவரையும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கத்தியைக் காட்டி மிரட்டி சித்ரவதை செய்துள்ளார்.

பிறர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் இருந்திருக்கின்றனர். சித்ரவதையை பொறுக்க முடியாத அழகப்பனின் தாய் சொர்ணம் "காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்" என கூச்சலிட்டுள்ளார்.

அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன்பு கூடியுள்ளனர். இதை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்களை விரட்டிச் சென்ற பொதுமக்கள் கொள்ளையர்களில் ஒருவனை பிடித்து விசாரித்தில் அவன் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொட்டக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்துள்ளது.

அழகப்பன் அவரது தாயார் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை

காவலர்கள் வந்ததும் அவர்களிடம் கொள்ளையனை ஒப்படைத்துள்ளனர். இனிமேல் நாங்கள் பார்த்து கொள்கிறோம் யாரும் இவனை அடிக்க வேண்டாம் என காவலர்கள் சொன்னதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர். காவலர்களின் அஜாக்கிரதையால் அவர்களின் பிடியிலிருந்த கொள்ளையன் தப்பி ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.

இச்சம்பவத்தில் காயம் அடைந்த அழகப்பன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பி ஓடிய கொள்ளையர்களை நத்தம் போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையனை பொதுமக்களே பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்த நிலையில், அவனை காவலர்களே தப்பவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிவிட்டு... அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

கோவை, கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் கோயில் உள்ளது. அங்கு தினசரி பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலில் பூஜை முடிந்த பிறகு, வழக்கம் போல கோயிலை ... மேலும் பார்க்க

முத்திரைத்தாள் மோசடி: அதிமுக முன்னாள் MLA சாந்தி ராமு மீது 5 பிரிவுகளில் வழக்கு - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராமு. படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தே.மு.தி.க-வில் இணைந்து கட்சி பதவிகளை வகித்து வந்தார். சாந்தி ராமுபல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இர... மேலும் பார்க்க

சிவகங்கை: 6 பேர் உயிரிழந்த குவாரி.. `விதிகளை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டதால் ரூ.91 கோடி அபராதம்'

விதி மீறலால் 6 பேர் உயிரிழக்க காரணமான கல் குவாரி நிறுவனத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மேகா ப்ளூ மெட்டல் குவாரிசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்ல... மேலும் பார்க்க

தென்காசி: முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 5 பேர் பலி; உரிமையாளர் கைது; பின்னணி என்ன?

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை முதியோர் இல்லத்தை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்துள்ளார். 8 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட... மேலும் பார்க்க

கடலூர்: 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி தரும் வாக்குமூலம்; போலீஸ் சொல்வது என்ன?

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர் சாலையில் நடைப்பயிற்சி ... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு : `யார் இந்த மகேஷ்வரி?’ - ஜெயராமன், பூவை ஜெகன்மூர்த்தி கொடுத்த பதில்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு கலாம்பாக்கம் கிராமம் வங்கித் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரின் மூத்த மகன் தனுஷ் (22). இளையமகனுக்கு 17 வயதாகுகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க