செய்திகள் :

பாலி சென்ற ஏர் இந்தியா விமானம் தில்லிக்கே திரும்பியது!

post image

தில்லியில் இருந்து இந்தோனேஷியாவின் பாலிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் தில்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

தில்லி விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை பாலிக்கு ஏர் இந்தியாவின் ஏஐ2145 விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், பாலி விமான நிலையத்தை ஏர் இந்தியா விமானம் நெருங்கியபோது, அப்பகுதியில் எரிமலை வெடித்துச் சிதறியதால், மீண்டும் தில்லிக்கே திரும்பிச் செல்ல விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி தில்லிக்கே திரும்பிவந்ததாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு முழு பணத்தையும் திருப்பி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலி அருகேவுள்ள சுற்றுலா தீவான புளோரஸில் உள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி செவ்வாயன்று வெடித்தது.

இதன்காரணமாக 10 கி.மீ. உயரத்துக்கு புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஏர் இந்தியா மட்டுமின்றி, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜூன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் பாலி இயக்கப்படும் விமான சேவையை ரத்து செய்துள்ளன.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பிறகு, இதுவரை 83 சேவைகளை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளதாகவும், அதில் 66 போயிங் 787 ரக விமானம் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க : மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க

சகோதரரின் இறுதிச் சடங்கு: விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் பங்கேற்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நொடிகளில் க... மேலும் பார்க்க

கேரளத்தில் தொடரும் கனமழை! மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்!

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் அங்குள்ள சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் உங்கள் பாக்கெட்டையும் காலி செய்யும்! எவ்வாறு?

இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் சண்டையானது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்று மட்டும் நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரச்னைதான்.உண்மையில் சொல்லப்... மேலும் பார்க்க

தேனிலவுக்கு முன் காதலனுடன் தப்பிய புது மணப்பெண்! நல்லவேளை, உயிர் பிழைத்தேன் என மணமகன் மகிழ்ச்சி!

உத்தரப் பிரதேசத்தில் திருமணமான ஒரு மாதத்துக்குள் காதலனுடன் பெண் சென்ற நிலையில், பேச்சுவார்த்தை மூலம் புதுமணத் தம்பதியை குடும்பத்தினர் பிரித்துவைத்தனர்.பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் (வயது 23).... மேலும் பார்க்க

அமர்நாத்தில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கத் திட்டம்!

அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு காவல்துறைக்கு அமர்நாத் வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தே... மேலும் பார்க்க