செய்திகள் :

அப்பாவிற்கு ஒரு இரங்கற்பா! | #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மன்னார்கோவிலில் பிறந்தாய் –

ஏழு உடன்பிறந்தோருடன்

கூடிக்குலாவி வளர்ந்தாய் –

ஊரிலே படித்தாய்

கணக்கில் புலியாய் இருந்தாய் –

சிறுவயது  கதைகள்  பல  சொல்லி 

வாழ்க்கையின்  அடிநாதம் உரைத்தாய் –

வேலை நிமித்தம்

சென்னை வந்தாய்

பார்த்தசாரதி கோவிலில்

பணியில் இருந்தாய்

உன் மக்கள் செல்வாக்கு

திருப்பதி வரை அலைமோதியது –

உன் பேச்சிலர் நாட்கள்

வானமாமலை மடம் நண்பர்கள்

செகண்ட் ஷோ சினிமா

நீ கேட்ட ஹிந்தி, ஆங்கில பாடல்கள்

சீட்டாட்ட காஸ்மோபாலிட்டன் கிளப்

பாஷா கடை வெற்றிலை பாக்கு

ஒன்றாம் நம்பர் பஸ் ஸ்டாண்ட்

உன்னுடைய பிரத்தியேக பழமொழிகள் - என

திருவல்லிக்கேணி முழுதும்

உன் வாசம் வீசும் –

ராமா என்று அழைத்தாலே

ஹனுமான் வருவான் இங்கு

ராமா என்று நினைத்தாலே

நீ இருப்பாய் அங்கு – இதை

அறிந்தோர் சொல்வர் –

காலனி வீட்டு ஜன்னலில்

நீ மாலை வரும் நேரம் –

சிறகடித்து சிறு பிள்ளையாய்

காத்திருப்பேன் நான் –

வெள்ளை பேண்ட்

வெள்ளை சட்டை

கக்கத்தில் ஒரு லெதர் பேக்

வாயில் வெற்றிலை பாக்கு – என்று

தூரத்தில் நீ நிழலாடுகையில் -

எனக்கு தினமும்

வானவில் பார்த்த மகிழ்ச்சிதான் –

தந்தை மகன் போல்

என்றும் இருந்ததில்லை நாம் –

தோளுக்கு கீழே இருக்கும்போதே

தோழன் ஆக்கியவன் நீ –

உன் நட்பு வட்டத்தில்

பேதம் கிடையாது –

என் நண்பர்களும்

உனக்கு நண்பர்கள்தான் –

உன் நகைச்சுவை ஊற்றில்

இன்றும் நான் நனைகிறேன் –

நீ விட்டுச்சென்ற

அச்சுவையை வைத்து

என் நாட்களை கடக்கிறேன் –

காலம் உன்னை

புரட்டிய போதும்

அசையாமல்

நிமிர்த்து நின்றாய் –

கடைசியாய் நீ

அசந்த நேரம்

வெற்றி வாகையை

காலன் சூடி நின்றான் –

நல்லதோ கெட்டதோ

என் பிள்ளைக்கு

நானே ஆசிரியன்

என்று கூறுவாய் –

நீ போகும்போதும்

சொன்னபடியே

வாழ்க்கை பாடம்

எடுத்து விட்டாயே –

அப்பா ……..

மகன் – குப்புஸ்வாமி ராமனாய் வந்தாய்

கணவன் – ராஜலட்சுமி ராமனாய் வாழ்ந்தாய்

அப்பா – பார்த்தசாரதி ராமனாய் முளைத்தாய்

தாத்தா – அணிமலர் ராமனாய் விருட்சமானாய்

சென்று வா ராமா …..Love you & Miss you My Dear HERO

Letter Contest

என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றை நீ எனக்கு செய்தாய்! - அப்பாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என்னடா இவரு நம்மளை கண்டுக்கவே இல்லை என்று தோன்றும்! - அப்பாவுக்கு ஒரு மகனின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நான் மாறியதற்கான காரணத்தை காலம் உனக்குப் புரிய வைக்கும்! - மகளுக்கு ஒரு கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார்

அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு என 70-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். 1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி நெல்லையைச் சேர்ந... மேலும் பார்க்க

மிளிர் கல் : கண்ணகியின் வழித்தடத்தில் ஒரு பயணம் - அட்டகாச கதை

பூம்புகார் தொடங்கி இடுக்கியில் அமைந்துள்ள மங்களா தேவி கண்ணகி கோயில் வரை கண்ணகியின் வழித்தடத்தில் ஒரு பயணம் சென்றால் எப்படி இருக்கும்? அந்தப் பயணம் தான் மிளிர் கல் நாவல். புறநானூறு காலம்புறநானூறு உள்ளி... மேலும் பார்க்க