செய்திகள் :

கோவாவில் இளம்பெண் கொலை! காதலன் எங்கே? பெங்களூரிலிருந்து மணம்புரிய வந்தவர்கள்!

post image

தெற்கு கோவாவின் பிரதாப் நகரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலிருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது 22 வயது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளும் ஆசையோடு, பெங்களூரிலிருந்து கோவா சென்ற காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர் சஞ்சய் கெவின் (22) என்பதும், இவர் கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும், கொலையான பெண் ரோஷினி மோசஸ் (22) என்பதும், இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. ரோஷினியைக் கொலை செய்துவிட்டு, சஞ்சய் பெங்களூருக்குத் தப்பிக் சென்றிருக்கிறார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது, திருமணம் செய்துகொள்வதற்காக இருவரும் பெங்களூரிலிலுந்து கோவாவுக்கு அண்மையில் வந்துள்ளனர். ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக இருவருக்கும் இடையே சண்டை வலுத்து, அதில் சஞ்சய், ரோஷினியைக் கொன்று வனப்பகுதியில் உடலை வீசியிருக்கிறார்.

வனப்பகுதியில், பெண்ணின் உடல் கழுத்தறுபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தியதில், சஞ்சய்தான் கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டு, பெங்களூர் சென்ற தனிப்படையினர் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

கொலைக்கான காரணம் பிறகு தெரியவரும் என்று கூறப்படுகிறது.

திருமணம் செய்துகொள்ளும் கனவோடு வந்த காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு கொலையில் முடிந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க

சகோதரரின் இறுதிச் சடங்கு: விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் பங்கேற்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நொடிகளில் க... மேலும் பார்க்க

கேரளத்தில் தொடரும் கனமழை! மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்!

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் அங்குள்ள சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் உங்கள் பாக்கெட்டையும் காலி செய்யும்! எவ்வாறு?

இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் சண்டையானது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்று மட்டும் நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரச்னைதான்.உண்மையில் சொல்லப்... மேலும் பார்க்க