செய்திகள் :

விமான விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 70 சவரன் தங்க நகைகள்!

post image

காந்திநகர்: ஏர் இந்தியா விமானம், ஜூன் 12ஆம் தேதி பகல் 1.30 மணியளவில், குடியிருப்புகளுக்கு இடையே விழுந்து விபத்துக்குள்ளான போது, அங்கு பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

அதில் ஒருவராக இருந்தவர்தான் தொழிலதிபர் ராஜு. சம்பவம் நடந்த போது, மிக அருகிலேயே இருந்த அவர், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட தனது நண்பர்கள் குழுவுடன் சென்றுள்ளார்.

முதலில், கடுமையான வெப்பத்தால் அங்கு தங்களால் நிற்கக் கூட முடியவில்லை. பிறகு, தீயணைப்புத் துறையினர் வந்து தீயைக் கட்டுப்படுத்திய நிலையில்தான் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற உதவி செய்தோம்.

மாலை 4 மணிக்கெல்லாம், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அங்கிருந்த முக்கியமான ஆவணங்கள் பொருள்களை மீட்கும் பணியைத் தொடங்கினோம்.

அங்கிருந்த கைப்பைகளை சேகரித்தோம். அதிலிருந்து முக்கிய ஆவணங்கள், பாஸ்போர்ட்டுகள், பலியானவர்கள் அணிந்திருந்த வளையல் உள்ளிட்ட தங்க நகைகள், அனைத்தையும் சேகரித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். இதுவரை 70 சவரன் தங்க நகைகளை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், அவை, பலியானவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்திருப்பதாகக் கூறினார்கள்.

ஒருவர் பையிலிருந்து பகவத் கீதையும் கண்டெடுத்தோம். பாஸ்போர்டுகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இரவு 9 மணி வரை அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும், இதுபோன்றதொரு விபத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என்றும், ஏற்கனவே 2008ல் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போதும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அனுபவம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க

சகோதரரின் இறுதிச் சடங்கு: விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் பங்கேற்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நொடிகளில் க... மேலும் பார்க்க

கேரளத்தில் தொடரும் கனமழை! மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்!

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் அங்குள்ள சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் உங்கள் பாக்கெட்டையும் காலி செய்யும்! எவ்வாறு?

இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் சண்டையானது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்று மட்டும் நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரச்னைதான்.உண்மையில் சொல்லப்... மேலும் பார்க்க