செய்திகள் :

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக புதன்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை நிலை அமல்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் விமானம் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா சிறப்பு பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று கொச்சியில் இருந்து தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : டிரம்ப்புடன் மோடி பேசியது என்ன? விக்ரம் மிஸ்ரி, வெள்ளை மாளிகை அறிக்கைகளில் முரண்! - காங்கிரஸ் கேள்வி

கேரளத்தில் தொடரும் கனமழை! மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்!

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் அங்குள்ள சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் உங்கள் பாக்கெட்டையும் காலி செய்யும்! எவ்வாறு?

இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் சண்டையானது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்று மட்டும் நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரச்னைதான்.உண்மையில் சொல்லப்... மேலும் பார்க்க

தேனிலவுக்கு முன் காதலனுடன் தப்பிய புது மணப்பெண்! நல்லவேளை, உயிர் பிழைத்தேன் என மணமகன் மகிழ்ச்சி!

உத்தரப் பிரதேசத்தில் திருமணமான ஒரு மாதத்துக்குள் காதலனுடன் பெண் சென்ற நிலையில், பேச்சுவார்த்தை மூலம் புதுமணத் தம்பதியை குடும்பத்தினர் பிரித்துவைத்தனர்.பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் (வயது 23).... மேலும் பார்க்க

அமர்நாத்தில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கத் திட்டம்!

அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு காவல்துறைக்கு அமர்நாத் வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தே... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடப்பதற்காக பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக்கில் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு ச... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்து!

அகமதாபாத் விமான விபத்துக்கு விமானத்தின் அதிக எடை காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் விமானி ஒருவர் கூறியுள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் க... மேலும் பார்க்க