செய்திகள் :

மகாராஷ்டிர பள்ளிகளில் 3வது மொழியாக ஹிந்தி கற்பிப்பது வரவேற்கத்தக்கது: அமைச்சர்

post image

பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹந்தி கற்பிக்கப்படும் என்ற அரசின் முடிவை மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூஸ் வரவேற்பு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்ற அரசின் முடிவை தான் ஆதரிப்பதாகவும், அதேசமயம் பாடத்திட்டத்தின்படி மராத்தியைக் கற்பிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

மகாராஷ்டிர அரசு செவ்வாயன்று பிறப்பித்த உத்தரவில், மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி பொதுவாக மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும்.

திருத்தப்பட்ட அரசுத் தீர்மானத்தில் ஹிந்தி கட்டாயமாக இருப்பதற்குப் பதிலாக பொதுவாக மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இந்திய தவிர வேறு எந்த இந்திய மொழியையும் படிக்க விருப்பம் தெரிவித்தால், தேர்விலிருந்து விலகுவதற்கான விருப்பத்தையும் வழங்கியது.

ஹிந்தி கற்றுக்கொள்வது மாணவர்களுக்குப் பயனளிக்கும். ஹிந்தி கற்பது முக்கியம், ஏனெனில் அது பொது வாழ்வில் தொடர்புக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

12-ம் வகுப்புக்குப் பிறகு, மத்திய அரசு மூன்றாவது மொழியிலும் மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. அத்தகைய கொள்கையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பின்தங்கக்கூடாது. எனவே மும்மொழிக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, ஹிந்தி கற்றுக்கொள்வது நீண்ட காலத்திற்கு மாணவர்களுக்குப் பயனளிக்கும்.

மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு முதல் ஹிந்தி ஏற்கெனவே கற்பிக்கப்பட்டு வருவதாகவும், மராத்தி வழிப் பள்ளிகள் அல்லாத பிற பள்ளிகளில் மராத்தி கட்டாயமாகவும், ஆங்கிலம் மூன்றாம் மொழியாகவும் கற்பிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக வேறு இந்திய மொழியைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.

மாணவர்கள் வேறு எந்த மொழியையும் தேர்வுசெய்தாலும், அதற்கான ஏற்பாடுகள் செய்து தருவோம். குறைவான மாணவர்கள் ஒரு மொழியை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அந்த மொழி ஆன்லைனில் அல்லது கிடைக்கக்கூடிய பிற ஊடகங்கள் மூலம் கற்பிக்கப்படும்.

மூன்றாவது மொழியைத் தேர்ந்தெடுப்பது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் விருப்பம். இது மாணவர்களின் தகுதியை மேம்படுத்த உதவும் என்று அமைச்சர் கூறினார்.

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க