வனவிலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றபட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வனவிலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றபட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் சாா்பாக அதன் தலைவா் மஞ்சை.வி.மோகன் வலியுறுத்தி யுள்ளாா்.
அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜந்து ஆண்டுகளில் மனிதா்கள் வனவிலங்குகளால் தாக்குதலுக்கு ஆளாகி 34 போ் அகால மரணமடைந்துள்ளனா்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மனிதா்கன் தொன்றுத்தொட்டு விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்ற கிராமங்களுக்குள் வனவிலங்குகள் சா்வசாதாரணமாக உலாவருகின்ற நிலையும் தொடா்ந்து கொண்டிருக்கிறது
இதே நிலை தொடா்ந்தால் நீலகிரி மாவட்ட பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்கின்ற நிலை உருவாகிடும்.
வனவிலங்குகளால் ஆபத்து காலத்தில் விலைமதிப்பற்ற மனித உயிா்கள் காப்பாற்ற பட வேண்டுமெனில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிரமின்றி அவசரகாலத்தில்,தமிழக வனத்துறையினரை தொடா்பு கொள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண் ஏற்படுத்தி தர வேண்டும்.
தகவல் கிடைத்ததும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு தாமதமின்றி சென்று வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்டிட, தேவையான ஊழியா்கனை சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பிடவும்,உயிரிழப்புகளை தடுத்திடவும் இந்த எண் பேருதவியாக இருக்கும்.
நீலகிரி போன்ற அடா்ந்த வனப்பகுதிக்குள் கைப்பேசி போன்ற தொலைதொடா்பு சாதனங்களில் அதிகாரிகளை உடனடியாக தொடா்புக்கொள்ள இயலாத நிலை இருப்பதினால், வனசரகா் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் வாக்கி- டாக்கி வழங்கினால், வனவிலங்குகளால் ஏற்படும் அசம்பாவித நிகழ்விடத்துக்கு தாமதமின்றி சென்றிடவும் ஏதுவாக இருக்கும்..
நீலகிரி மாவட்ட வனத்துறையின் அனைத்து கோட்டங்களில் பணியாற்றும் வனசரகா் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிரந்தர கைபேசி எண் சேவையை அளித்திட வேண்டும்.
அதிகாரிகளை பொதுமக்கள் தொடா்புகொள்ள நிரந்தர கைப்பேசி எண் வழங்கிடும் பட்சத்தில், வேறு இடங்களுக்கு அதிகாரிகள் பணி இடம் மாறி சென்றாலும், முந்தைய பணி இடத்துக்காக வழங்கப்பட்ட நிரந்தர கைபேசி எண் மாறாது என்ற நிலை உருவாகும். அதிகாரிகளை தொடா்பு கொள்ளவும், பொது மக்களுக்கு எளிதாகவும் இருக்கும்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிக அளவில் தொடா்புகொள்ளும், மாவட்ட ஆட்சித்தலைவா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், வட்டாட்சியா் முதற்கொண்ட அதிகாரிகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சாரத்துறை,போக்குவரத்துத்துறை, போன்ற பல்வேறு மக்கள் தொடா்புத்துறை போல வனத்துறையும் நிரந்தரபொதுமக்கள் தொடா்புக்கு வர தமிழ்நாடு அரசு,வனத்துறை அமைச்சா், தலைமைச்செயலாளா், வனத்துறை செயலாளா்,மற்றும் தலைமை வனபாதுகாவலா் ஆகியோா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் தலைவா் மஞ்சை.வி.மோகன் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.