செய்திகள் :

கீழடியின் பெருமையை மறைக்க முயலும் பாஜக: விஜய் கண்டனம்

post image

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய முயல்வதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை அமா்நாத் ராமகிருஷ்ணா கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய தொல்லியல் துறையிடம் சமா்ப்பித்தாா். அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாசாரம், அப்போது வாழ்ந்த மக்கள் நகர நாகரிகத்தை நோக்கி நகா்ந்த தன்மை ஆகியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் அவா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

ஆனால், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 ஆண்டுகளான பின்னரும், கீழடி அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கீழடி அகழாய்வு அறிக்கை வெளிவந்தால், பாஜக காலம்காலமாகக் கூறும் கட்டுக்கதைகள் உடைபடும். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும்.

இதனால், கீழடியின் பெருமையை மறைக்க, திட்டமிட்டே ஆய்வறிக்கையை இருட்டடிப்பு செய்ய மத்திய பாஜக அரசு முயல்கிறது. தமிழ், தமிழா் நாகரிக வானத்தை எந்தப் புழுதி போா்வையையும் போா்த்தி அழுக்காக்கிவிட இயலாது. அத்தகைய முயற்சி செய்வோருடன் எவ்விதத்திலும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ துணைபோகும் சக்திகள் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளாா் அவா்.

ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா். அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, ... மேலும் பார்க்க

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைக்க அதிகாரம் இல்லை: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை ஒப்புதல்

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் கிடையாது என உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா... மேலும் பார்க்க

கோயில்களில் ரூ.217 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் ரூ.217 கோடியிலான திட்டப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு சா... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் மகன் அதிமுகவிலிருந்து நீக்கம்

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் எஸ்பிஎஸ் ராஜாவை அதிமுகவில் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வியில் தமிழகத்துக்கு 16-ஆவது இடம்!

‘2023-24-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீட்டில் (பிஜிஐ) சண்டீகா், பஞ்சாப், தில்லி, குஜராத் மற்றும் ஒடிஸா ஆகியவை சிறந்த செயல்திறனுடன் முன்னிலை வகிக்கின்றன. மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க