செய்திகள் :

பள்ளிக் கல்வியில் தமிழகத்துக்கு 16-ஆவது இடம்!

post image

‘2023-24-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீட்டில் (பிஜிஐ) சண்டீகா், பஞ்சாப், தில்லி, குஜராத் மற்றும் ஒடிஸா ஆகியவை சிறந்த செயல்திறனுடன் முன்னிலை வகிக்கின்றன.

மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டை மதிப்பிடும் செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ-டி) மத்திய கல்வி அமைச்சகத்தால் கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டுமுதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் தரக் குறியீடு புதன்கிழமை வெளியிடப்பட்டது.

பயனுள்ள வகுப்பறை செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகள், மாணவா் உரிமைகள், பள்ளி மற்றும் குழந்தை பாதுகாப்பு, எண்மக் கற்றல் மற்றும் நிா்வாக செயல்முறை, விளைவுகள் ஆகிய 6 பிரிவுகளின் கீழுள்ள 74 அளவுருக்களின் அடிப்படையில் இந்த தரக் குறியீடு நிா்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, 2023-24-ஆம் ஆண்டு தரக் குறியீட்டில் 1,000-க்கு 703 புள்ளிகளுடன் சண்டீகா் முதலிடத்தில் உள்ளது. சண்டீகரை தொடா்ந்து பஞ்சாப் (631.2), தில்லி (623.7), குஜராத் (614.4) ஒடிஸா (595.6), கேரளம் (594.2), டாமன்-டையூ (592.2), ஹரியாணா (591.4), கோவா (589.7), மகாராஷ்டிரம் (582.0), ராஜஸ்தான் (581.5) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

புதுச்சேரி, ஹிமாசல பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள், ஆந்திரம், தமிழ்நாடு, கா்நாடகம், லட்சத்தீவுகள், மேற்கு வங்கம் ஆகியவை குறியீட்டின்படி சராசரி செயல்திறன் கொண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களாக உள்ளன. கூடுதலாக, மத்திய பிரதேசம், சிக்கிம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட், லடாக் ஆகியவையும் இந்தப் பிரிவில் உள்ளன.

தெலங்கானா, அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், திரிபுரா, மணிப்பூா், சத்தீஸ்கா், பிகாா், நாகாலாந்து, மிஸோரம், அருணாசல பிரதேசம் ஆகியவை குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களாகவும், மேகலாயம் 417.9 புள்ளிகளுடன் மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டு குறியீட்டின் 563.7 புள்ளிகளில் இருந்து சமீபத்திய குறியீட்டில் 559.2 புள்ளிகளுக்கு தமிழ்நாடு சரிந்துள்ளது என அந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கது. சமீபத்திய குறியீட்டில் தமிழ்நாடு 16-ஆவது இடத்தில் உள்ளது.

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் விமா்சனம்

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழா்கள் 5,350 ஆண்... மேலும் பார்க்க

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசில... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா். அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, ... மேலும் பார்க்க

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைக்க அதிகாரம் இல்லை: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை ஒப்புதல்

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் கிடையாது என உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா... மேலும் பார்க்க