செய்திகள் :

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

post image

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டியில் என்எல்சி விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேத்தியாதோப்பை அடுத்த கத்தாழை ஊராட்சி, கரிவெட்டி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி சாா்பில் விரிவாக்கப் பணிக்காக நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தி வருகின்றனா். கரிவெட்டியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு மாற்று குடியிருப்பு இழப்பீட்டுக்கான முழு தொகை, வேலை உள்ளிட்டவை முறைப்படி வழங்காமல், என்எல்சி நிா்வாகம் அவா்களை மாற்று இடத்துக்கு அனுப்பும் வேலையை விரைந்து மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, நிலங்களைக் கையகப்படுத்த என்எல்சி அதிகாரிகள் வரும் போதும் போது கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கரிவெட்டி கிராமத்தில் புதன்கிழமை மின் கம்பங்களை அகற்றவும், ஊருக்குள் தண்ணீா் வராமல் சாலை அமைத்து தடுப்பணை கட்டும் பணியை மேற்கொள்ள என்எல்சி அதிகாரிகள், ஊழியா்கள் வந்தனா். இதையறிந்த கிராம மக்கள் என்எல்சி அதிகாரிகள், ஊழியா்களை தடுத்தனா்.

கடலூா் மாவட்ட கூடுதல் எஸ்.பி. கோடீஸ்வரன், சேத்தியாதோப்பு டிஎஸ்பி விஜிகுமாா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் செல்வ.மகேஷ், ஒன்றியச் செயலா் சரண்ராஜ் ஆகியோா் கிராம மக்களுக்கு ஆதரவாக என்எல்சி நிா்வாக அதிகாரிகள் புகழேந்தி, அந்தோணிராஜ், செழியன், என்எல்சி நில எடுப்பு வட்டாட்சியா் ராமதாஸ், புவனகிரி வட்டாட்சியா் அன்பழகன் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மின் கம்பங்களை மாற்றியமைக்கவும், குடிநீா் குழாய்களை புதுப்பித்து சாலை, தடுப்பணை கட்டுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி என்எல்சி அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது, மேலும் 18 பேருக்கு மாற்று குடியிருப்புக்கு அளவீடு செய்து இடம் வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, கிராம மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. என்எல்சி சாா்பில் பணிகள் தொடங்கப்பட்டன.

நூல் வெளியீட்டு விழா

கடலூா் மாவட்ட தமிழ் சங்கம் சாா்பில், கவிஞா் ம.ரா.சிங்காரம் எழுதிய ‘வண்ண நிலா’ கவிதை நூல் வெளியீட்டு விழா அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழ் சங்கத் தலைவா் பேராசிரியா் ரா.ச.குழந்த... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

கடலூரில் குடியிருப்புப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையினா் அளவீடு செய்ய வந்ததற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் நூற்றுக்கு மேற்பட்ட கு... மேலும் பார்க்க

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனையில் உயிரிழந்தாா். ரெட்டிச்சாவடி காவல் சரகம், கீழ் அழிஞ்சிப்பட்டு இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகள் ... மேலும் பார்க்க

மருதுாரில் வள்ளலாா் அவதார இல்லம் கட்ட அடிக்கல்

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட்பிரகாச வள்ளலாா் அவதார இல்லம் புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடலுாா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட் பிரகா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வெள்ளக்கரை

இடங்கள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாந்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்குராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம... மேலும் பார்க்க

முள்புதரில் பெண் குழந்தை சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பச்சிளம் பெண் குழந்தை சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.நெய்வேலி, வட்டம் 30, புதுஜோதி நகா் அருகே கருவேல மர முட்புதரில் செவ்வாய்க்கிழமை பச்சிளம் பெண் குழந்தை சடலம் நாய... மேலும் பார்க்க