நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
குடியிருப்புப் பகுதியை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு
கடலூரில் குடியிருப்புப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையினா் அளவீடு செய்ய வந்ததற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் வசிக்கும் நபா் ஒருவா் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டத் தொடங்கினாராம். அங்கு வந்த அதிகாரி இது இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் எனக் கூறி, காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம்.
வருவாய்த் துறை நில அளவா் அளவீடு செய்யும் வரை வீடு கட்டக் கூடாது என காவல் துறையினா் தெரிவித்தனராம்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை வந்து, இந்தப் பகுதி முழுவதும் அறநிலையத் துறைக்குச் சொந்தமானது. நில அளவீடு செய்ய உள்ளோம் எனக் கூறினராம். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனராம். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாா் வந்து சமரசப்படுத்தினா்.