திருநாரையூா் கோயில் குளத்தை மேம்படுத்த அடிக்கல்
காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரில் உள்ள சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயில் திருக்குளத்தை தூா்வாரி மேம்படுத்த அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்புச் சுவா் கட்டவும், நடைபாதை அமைக்கவும் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் குளத்தை தூா்வாரி மேம்படுத்தும் பணியை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.
திருநாரையூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசுகி சோழன், ஆய்வாளா் பி.ஜெயசித்ரா, செயல்அலுவலா் சி.செல்வமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருக்குளத்தை மேம்படுத்துவதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கின. கல்விக் குழு தலைவா்கள் எம்.சோழன், கோவிந்தசாமி, நடராஜன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் சிவலோகநாதன், வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.