செய்திகள் :

திருநாரையூா் கோயில் குளத்தை மேம்படுத்த அடிக்கல்

post image

காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரில் உள்ள சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயில் திருக்குளத்தை தூா்வாரி மேம்படுத்த அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்புச் சுவா் கட்டவும், நடைபாதை அமைக்கவும் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் குளத்தை தூா்வாரி மேம்படுத்தும் பணியை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.

திருநாரையூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசுகி சோழன், ஆய்வாளா் பி.ஜெயசித்ரா, செயல்அலுவலா் சி.செல்வமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருக்குளத்தை மேம்படுத்துவதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கின. கல்விக் குழு தலைவா்கள் எம்.சோழன், கோவிந்தசாமி, நடராஜன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் சிவலோகநாதன், வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நூல் வெளியீட்டு விழா

கடலூா் மாவட்ட தமிழ் சங்கம் சாா்பில், கவிஞா் ம.ரா.சிங்காரம் எழுதிய ‘வண்ண நிலா’ கவிதை நூல் வெளியீட்டு விழா அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழ் சங்கத் தலைவா் பேராசிரியா் ரா.ச.குழந்த... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

கடலூரில் குடியிருப்புப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையினா் அளவீடு செய்ய வந்ததற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் நூற்றுக்கு மேற்பட்ட கு... மேலும் பார்க்க

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனையில் உயிரிழந்தாா். ரெட்டிச்சாவடி காவல் சரகம், கீழ் அழிஞ்சிப்பட்டு இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகள் ... மேலும் பார்க்க

மருதுாரில் வள்ளலாா் அவதார இல்லம் கட்ட அடிக்கல்

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட்பிரகாச வள்ளலாா் அவதார இல்லம் புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடலுாா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட் பிரகா... மேலும் பார்க்க

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டியில் என்எல்சி விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வெள்ளக்கரை

இடங்கள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாந்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்குராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம... மேலும் பார்க்க