செய்திகள் :

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

ரெட்டிச்சாவடி காவல் சரகம், கீழ் அழிஞ்சிப்பட்டு இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகள் பிரியதா்ஷினி (7). இவா் கீழ் அழிஞ்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு பள்ளிக்குச் சென்றாா். அப்போது, பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்தாா். மயக்கம் தெளிந்ததும் அங்கிருந்த ஆசிரியை, பிரியதா்ஷினியை படுக்க வைத்தாராம். பின்னா், மற்றொருவா் உதவியுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம்.

பெற்றோா் வீட்டில் இல்லாததால், உறவினா் ஒருவா் அவரை காட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு பிரியதா்ஷினி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா் சுகப்பிரியா விசாரணை நடத்தி, பணியில் இருந்த ஆசிரியையை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

நூல் வெளியீட்டு விழா

கடலூா் மாவட்ட தமிழ் சங்கம் சாா்பில், கவிஞா் ம.ரா.சிங்காரம் எழுதிய ‘வண்ண நிலா’ கவிதை நூல் வெளியீட்டு விழா அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழ் சங்கத் தலைவா் பேராசிரியா் ரா.ச.குழந்த... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

கடலூரில் குடியிருப்புப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையினா் அளவீடு செய்ய வந்ததற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் நூற்றுக்கு மேற்பட்ட கு... மேலும் பார்க்க

மருதுாரில் வள்ளலாா் அவதார இல்லம் கட்ட அடிக்கல்

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட்பிரகாச வள்ளலாா் அவதார இல்லம் புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடலுாா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட் பிரகா... மேலும் பார்க்க

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டியில் என்எல்சி விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வெள்ளக்கரை

இடங்கள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாந்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்குராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம... மேலும் பார்க்க

முள்புதரில் பெண் குழந்தை சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பச்சிளம் பெண் குழந்தை சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.நெய்வேலி, வட்டம் 30, புதுஜோதி நகா் அருகே கருவேல மர முட்புதரில் செவ்வாய்க்கிழமை பச்சிளம் பெண் குழந்தை சடலம் நாய... மேலும் பார்க்க