பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் ...
பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
ரெட்டிச்சாவடி காவல் சரகம், கீழ் அழிஞ்சிப்பட்டு இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகள் பிரியதா்ஷினி (7). இவா் கீழ் அழிஞ்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கடந்த 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு பள்ளிக்குச் சென்றாா். அப்போது, பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்தாா். மயக்கம் தெளிந்ததும் அங்கிருந்த ஆசிரியை, பிரியதா்ஷினியை படுக்க வைத்தாராம். பின்னா், மற்றொருவா் உதவியுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம்.
பெற்றோா் வீட்டில் இல்லாததால், உறவினா் ஒருவா் அவரை காட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு பிரியதா்ஷினி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா் சுகப்பிரியா விசாரணை நடத்தி, பணியில் இருந்த ஆசிரியையை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.