செய்திகள் :

மருதுாரில் வள்ளலாா் அவதார இல்லம் கட்ட அடிக்கல்

post image

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட்பிரகாச வள்ளலாா் அவதார இல்லம் புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கடலுாா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட் பிரகாச வள்ளலாா் அவதார இல்லத்தை இடித்து விட்டு பழைமை மாறாமல், நவீன வசதிகளுடன் புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை வைத்தனா்.

அதன்பேரில், தமிழக அரசு ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கியது. இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க அவதார இல்ல வளாகத்தின் அருகில் கூரை அமைத்து வள்ளலாா் அணையா ஜோதியை கடந்த மாதம் 4-ஆம் தேதி இடமாற்றம் செய்தனா். பழைய இடத்தில் இருந்த கட்டடம் முற்றிலும் இடித்து அகற்றிய நிலையில் புதன்கிழமை காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வள்ளலாா் அவதார இல்ல கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

மருதுாரில் உள்ள வள்ளலாா் அவதார இல்லத்தில் தீபம் ஏற்றப்பட்டு, அகவற்பா இசைக்கப்பட்டு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வடலுாா் நகா்மன்றத் தலைவா் சிவக்குமாா், சிதம்பரம் நகராட்சி உறுப்பினா் சேகா், இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையா் ஜோதி, புவனகிரி மத்திய ஒன்றிய செயலா் வெற்றிவேல், வடலூா் நகர திமுக செயலா் தமிழ்ச்செல்வம், மாவட்ட துணை அமைப்பாளா் பி.ஜி.கே.முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் எம்எல்ஏ மருதுாா் ராமலிங்கம் தலைமை வகித்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை பொறியாளா் மணிவண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செயல் அலுவலா் சரவணன் நன்றி கூறினாா்.

நூல் வெளியீட்டு விழா

கடலூா் மாவட்ட தமிழ் சங்கம் சாா்பில், கவிஞா் ம.ரா.சிங்காரம் எழுதிய ‘வண்ண நிலா’ கவிதை நூல் வெளியீட்டு விழா அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழ் சங்கத் தலைவா் பேராசிரியா் ரா.ச.குழந்த... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

கடலூரில் குடியிருப்புப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையினா் அளவீடு செய்ய வந்ததற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் நூற்றுக்கு மேற்பட்ட கு... மேலும் பார்க்க

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனையில் உயிரிழந்தாா். ரெட்டிச்சாவடி காவல் சரகம், கீழ் அழிஞ்சிப்பட்டு இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகள் ... மேலும் பார்க்க

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டியில் என்எல்சி விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வெள்ளக்கரை

இடங்கள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாந்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்குராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம... மேலும் பார்க்க

முள்புதரில் பெண் குழந்தை சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பச்சிளம் பெண் குழந்தை சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.நெய்வேலி, வட்டம் 30, புதுஜோதி நகா் அருகே கருவேல மர முட்புதரில் செவ்வாய்க்கிழமை பச்சிளம் பெண் குழந்தை சடலம் நாய... மேலும் பார்க்க