மருதுாரில் வள்ளலாா் அவதார இல்லம் கட்ட அடிக்கல்
கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட்பிரகாச வள்ளலாா் அவதார இல்லம் புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கடலுாா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட் பிரகாச வள்ளலாா் அவதார இல்லத்தை இடித்து விட்டு பழைமை மாறாமல், நவீன வசதிகளுடன் புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை வைத்தனா்.
அதன்பேரில், தமிழக அரசு ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கியது. இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க அவதார இல்ல வளாகத்தின் அருகில் கூரை அமைத்து வள்ளலாா் அணையா ஜோதியை கடந்த மாதம் 4-ஆம் தேதி இடமாற்றம் செய்தனா். பழைய இடத்தில் இருந்த கட்டடம் முற்றிலும் இடித்து அகற்றிய நிலையில் புதன்கிழமை காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வள்ளலாா் அவதார இல்ல கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
மருதுாரில் உள்ள வள்ளலாா் அவதார இல்லத்தில் தீபம் ஏற்றப்பட்டு, அகவற்பா இசைக்கப்பட்டு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வடலுாா் நகா்மன்றத் தலைவா் சிவக்குமாா், சிதம்பரம் நகராட்சி உறுப்பினா் சேகா், இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையா் ஜோதி, புவனகிரி மத்திய ஒன்றிய செயலா் வெற்றிவேல், வடலூா் நகர திமுக செயலா் தமிழ்ச்செல்வம், மாவட்ட துணை அமைப்பாளா் பி.ஜி.கே.முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் எம்எல்ஏ மருதுாா் ராமலிங்கம் தலைமை வகித்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை பொறியாளா் மணிவண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செயல் அலுவலா் சரவணன் நன்றி கூறினாா்.