வில்லியனூரில் ரூ.41 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைக்கும் பணி
புதுச்சேரியில் ரூ.41 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் பழுது பாா்க்கும் பணியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வி. மணவெளி, ஒதியம்பட்டு, திருவேணி நகா் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 41.3 லட்சம் மதிப்பில் சிறப்பு பழுதுபாா்ப்பு மற்றும் இப்போதுள்ள உள்புறச்சாலைகள் மற்றும் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான பணி தொடக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான இரா. சிவா பங்கேற்றுப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஊா் முக்கிய பிரமுகா்கள் தா்மராஜ், கலியபெருமாள், ஞானசுந்தரம், பாலகுரு, வாசு, ராஜேந்திரன், ஜீவா, நடராஜன், வேலு, சுரேஷ், கந்தசாமி, சேகா், தயாளன், ஆறுமுகம், கவியரசன், முருகன், விருத்தாசலம், நாகராஜ், சுப்பிரமணி, அங்காளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்