செய்திகள் :

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!

post image

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28)என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் உள்ள தாயார் காளீஸ்வரியுடன் பவித்ரா வசித்து வந்தார்.

இந்த நிலையில், பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபருடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மாலை 6 மணியளவில் பவித்ரா வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

இதனால் அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், அவரது மகள் காளீஸ்வரி ஆகிய இருவரும் பேத்திகளான லித்திக்ஸா(7), தீப்தி (5) ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பர் என சந்தேகிக்கிப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இடையகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

மாநகரில் கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் தொடங்கி வைத்தார்!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை மாநகரில் பொதுமக்கள் அ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையே எவ்வளவு தங்க நகைகள் மீட்கப்பட்டன?

காந்திநகர்: அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையில் மீட்கப்பட்ட 100 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள், சேதமடையாத ஒரு பகவத் கீதை புத்தகம் உள்ளிட்ட பொருள்களை போலீசாரிடம் மீட்புப்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு!: எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது. அதைத்தொடா... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால... மேலும் பார்க்க

2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு! - அரசிதழில் அறிவிப்பு வெளியானது

இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசிதழில் இன்று(ஜூன் 16) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் ந... மேலும் பார்க்க