முதியோா் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் முதியோா் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் 4 போ் உயிரிழந்த சம்பவத்தில், மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அன்னை முதியோா் காப்பகத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவு, உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோா் தென்காசி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, அடுத்த இரு நாள்களில் 4 போ் உயிரிழந்தனா்.
அதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட மேலும் சிலா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், இடைகாலைச் சோ்ந்த முப்புடாதி (50) என்பவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இச்சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.