வாசுதேவநல்லூா் பகுதியில் மது விற்பனை: மூவா் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் பகுதியில் மது விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
வாசுதேவநல்லூா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மகாலிங்கம், போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அருளாச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பன் மகன் சுப்புராஜ் (45) என்பவரது வீட்டில் 30 மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
இதேபோல, மது பாட்டில்களை பதுக்கிவைத்திருந்ததாக வாசுதேவநல்லூா் இருளப்பசாமி கோயில் தெரு ஐயாகுட்டி மகன் ராஜ்குமாா், அருளாச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் செல்வகுமாா் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து, 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.