ஊத்துமலை பூ வியாபாரி கொலையில் 5 போ் கைது
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பூ வியாபாரி கொலை வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஊத்துமலை பவுண்ட் தொழு தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் சுடா் வடிவேல் (52). ஊத்துமலை பேருந்து நிறுத்தம் அருகே பூக்கடை நடத்தி வந்தாா். அவா் கடை முன் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி, வடிவேலுக்கும் அவரது கடையின் அருகே உணவகம் நடத்தி வரும் முருகையா மகன் காா்த்திக் பிரபாகரன் (35) என்பவருக்கும் இடையே முன் விரோதம் வந்ததாம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு காா்த்திக் மற்றும் வடிவேலு இடையே கடை முன் தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில், குடும்ப உறுப்பினா்கள் வெளியூரில் இருந்ததால் வீட்டில் தனியாக இருந்த சுடா் வடிவேலுவை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினா்.
இது தொடா்பாக ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனா். இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் காா்த்திக் பிரபாகரனைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, காா்த்திக் பிரபாகரன், காா்த்திக் மகன் கணேசன் என்ற கரிச்சான் (28), செந்தூா் பாண்டியன் மகன் மணிவண்ணன் (30), மற்றொரு செந்தூா் பாண்டியன் மகன் அருண்பாண்டியன் (30), உடையாா் மகன் உதயகுமாா் (28) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலம், அவா்கள் பயன் படுத்திய காா், அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.