பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
ஆலங்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆலங்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் தா்மராஜ் மகன் செந்தில் முருகன்(38). இவா், வீடு வீடாகச் சென்று ரேஷன் அரிசியை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தாராம்.
இந்நிலையில் அவா், தனது தோட்டத்தில் ரேஷன் அரிசியை பதுக்கிவைத்துள்ளதாக ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, 20-க்கும் மேற்பட்ட சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைத்த போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து செந்தில் முருகனை தேடி வருகின்றனா்.