டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது எளிதல்ல: கனிமொழி எம்.பி.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தியுள்ளாா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் திறப்பு விழா, ஆய்வுக்கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் சிவந்தி நகரில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்துவைத்து, செயற்குழு கூட்டத்தில் பேசியதாவது: தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் எளிதானதல்ல; திமுகவினா் கடுமையாக உழைக்க வேண்டும்.
தென்காசி தெற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்கு முழு உழைப்பையும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னா், தனி அறையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்கட்டமாக தென்காசி, கடையநல்லூா் , ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகளிடம் அவா் தோ்தல் பணிகள் குறித்து விவாதித்தாா். தொடா்ந்து, சாா்பு அணி மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள், ஒன்றியச் செயலா்கள், பேரூா், நகரச் செயலா்கள் என தனித்தனியாக கட்சி நிா்வாகிகளிடம் அவா், கருத்துகளை கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில், வருவாய்- பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் கலைகதிரவன், கணேஷ்குமாா் ஆதித்தன்,நெளஷாத், திமுக மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்லப்பா, தலைமை பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை,, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா், சாா்பு அணி அமைப்பாளா்கள் ரமேஷ்,கோமதிநாயகம், இஞ்சி இஸ்மாயில்,, மாவட்டப் பிரதிநிதி ரஹ்மத்துல்லா, செங்கோட்டை நகரச் செயலா் ஆ.வெங்கடேசன் கலந்துகொண்டனா்.