டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
திசையன்விளையில் வாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் வாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திசையன்விளையை அடுத்த மணலிவிளை சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (21). இவா், திசையன்விளை பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்தில் வாளுடன் சுற்றித் திரிவதாக, திசையன்விளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா்கள் ஆன்றோ பிரதீப், சதீஷ் ஆகியோா் சென்று, வாளுடன் சுற்றித் திரிந்த மணிகண்டனைப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா். ஆய்வாளா் சீதாலெட்சுமி வழக்குப் பதிந்து, மணிகண்டனைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தாா்.