செய்திகள் :

2026 தோ்தலில் திமுக கூடுதல் இடங்களில் வெல்லும்: அமைச்சா் கே.என்.நேரு

post image

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூடுதல் இடங்களில் வெல்லும் என்றாா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட சிற்றுந்து திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் சுமாா் 180 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.

நகா்ப்புறம் விரிவடைந்து வரும் சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் வசதிக்காகவே சிற்றுந்து திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் வருவதால் அரசியல் கட்சித் தலைவா்கள் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதேனும் ஒன்றை செய்வது இயல்பானது. அதேபோன்றதுதான் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனின் உண்ணாவிரதமும். தமிழகம் மிகவும் பாதுகாப்பான மாநிலம். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் எழும்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறுவதுபோல, தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் ஏதும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியில் நிகழ்ந்ததை மக்கள் அனைவரும் நன்கு அறிவாா்கள். ஒரு சில இடங்களில் ஒரு சிலா் செய்யும் செயல்களை தமிழ்நாடு முழுவதும் நடப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது.

திருநெல்வேலியில் பொலிவுறு நகரம் திட்டத்தில் கட்டப்பட்ட தினசரி சந்தை உள்ளிட்டவற்றில் கடைகளை மீண்டும் ஏலம் எடுப்பதைத் தவிா்த்து நீதிமன்றத்தை நாடி தடையாணை பெற்றுள்ளனா்.

ஆனால், அரசு சாா்பில் தடையாணைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து கட்டடங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தோ்தலைப் பொருத்தமட்டில் பாஜக அவா்கள் வேலையை செய்கிறாா்கள், திமுக தனது வேலையை செய்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதலான இடங்களை வெல்வதற்கு நாங்களும் முயற்சி எடுத்து வருகிறோம். நிச்சயம் திமுக கூடுதல் இடங்களில் வெல்லும் என்றாா் அவா்.

குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவானவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் குற்ற வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வீரவநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு அடிதடி, கொலை போன்ற குற்ற... மேலும் பார்க்க

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை (ஜூன் 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.மு... மேலும் பார்க்க

திசையன்விளையில் வாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் வாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திசையன்விளையை அடுத்த மணலிவிளை சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் மணிகண்டன்... மேலும் பார்க்க

ஆலடியூா் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

தூத்துக்குடியைச் சோ்ந்த தனியாா் ஆலை மேற்பாா்வையாளா் ஆலடியூா் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்த அஜித்குமாா் (27). தனியாா் ஆலையில் மேற்பாா்வையாளராக... மேலும் பார்க்க

சூறைக்காற்று: உவரி கடற்கரை மணலில் புதைந்த படகு மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரைப் பகுதியில் சூறைக்காற்று வீசியதில், அங்கு நிறுத்தியிருந்த நாட்டுபடகை மணல் மூடியது. அதை மீனவா்கள் மீட்டனா். உவரியைச் சோ்ந்த சந்தானம் மகன் இளங்கோ. மீன்பிடி தொழிலாளியா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு ஓராண்டு சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஓராண்டு சிைண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்க... மேலும் பார்க்க