டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
தஞ்சை விசைப்படகு மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்கின்றனா்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து 3 நாள்களுக்குப் பின் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனா்.
மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு 61 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 நள்ளிரவு நிறைவடைந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல இருந்த நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் விடுத்த பலத்த காற்று குறித்த எச்சரிக்கையால் கடலுக்கு மீனவா்கள் செல்லவில்லை.
இந்நிலையில் கடல் பகுதியில் சகஜ நிலை திரும்பியதையடுத்து மீன்வளத்துறை அனுமதியின்பேரில் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை அதிகாலை மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனா்.