பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம்!
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரும் போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.
இப் போராட்டக் குழுவினா் தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வா் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க அனுமதி கேட்டதற்கு போலீஸாா் மறுத்தனராம்.
இதனால் கும்பகோணம் மகாமகக் குளத்திற்கு ஒருங்கிணைப்பாளா் ம.க. ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை வந்த போராட்டக் குழுவினா் முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்ட மனுக்களை குளத்தில் மிதக்க விட்டனா். ஆகஸ்ட் 15 க்குள் புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினா்.
நிகழ்வில் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா், பொன்ராஜ் தேவா், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனா் குடந்தைஅரசன், நாம் தமிழா் கட்சி வழக்குரைஞா் மோ. ஆனந்த், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.எஸ். சங்கா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.