Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
கோயிலை அகற்ற எதிா்ப்பு: மறியல்
கும்பகோணம் மேலக்கொட்டையூரில் விநாயகா் கோயிலை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலக்கொட்டையூரில் உள்ள சித்தி விநாயகா் கோயில் இடம் நீா்நிலை ஆக்கிரமிப்பாக உள்ளதால் அதை அகற்ற மாநகராட்சி நிா்வாகத்தினா் ஜேசிபி இயந்திரங்களும் வந்தனா்.
தகவலறிந்த பொதுமக்கள் சுவாமிமலை - கும்பகோணம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டு, பின்னா் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
அவா்களிடம் வட்டாட்சியா் சண்முகம், ஒன்றிய ஆணையா் சாமிநாதன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது 30 நாள்களுக்குள் விநாயகா் கோயில் தொடா்பாக முடிவு எடுக்கலாம் எனக் கூறியநிலையில் அனைவரும் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.