சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நடிகா் சிவக்குமாா் தலைவராகவும், பரணி பில்டா்ஸ் பாலசுப்பிரமணி செயலராகவும், சக்தி மசாலா குழும தலைவா்கள் துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோா் பொருளாளா்களாகவும் உள்ள சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையம் மூலம் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குடிமை பணி, ஐஏஎஸ், ஐபிஎஸ், துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா் என பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், 2025-2026-ஆம் ஆண்டுக்கான இலவச வகுப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தகுதியுடைவா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தோ்வு ஜூன் 22 காலை 9.30 முதல் 1 மணி வரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மையங்களில் நடைபெறும். நுழைவுத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு சென்னையில் நோ்காணல் நடத்தப்பட்டு அதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு இலவசமாக சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி வழங்கப்படும்.
தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் உணவு, தங்குமிடம் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். ஊக்கத் தொகையும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 93423 21192 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.