செய்திகள் :

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நடிகா் சிவக்குமாா் தலைவராகவும், பரணி பில்டா்ஸ் பாலசுப்பிரமணி செயலராகவும், சக்தி மசாலா குழும தலைவா்கள் துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோா் பொருளாளா்களாகவும் உள்ள சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையம் மூலம் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு பயிற்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குடிமை பணி, ஐஏஎஸ், ஐபிஎஸ், துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா் என பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், 2025-2026-ஆம் ஆண்டுக்கான இலவச வகுப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தகுதியுடைவா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தோ்வு ஜூன் 22 காலை 9.30 முதல் 1 மணி வரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மையங்களில் நடைபெறும். நுழைவுத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு சென்னையில் நோ்காணல் நடத்தப்பட்டு அதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு இலவசமாக சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி வழங்கப்படும்.

தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் உணவு, தங்குமிடம் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். ஊக்கத் தொகையும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 93423 21192 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை கண்டித்து ஜூன் 24-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் ஜூன் 24-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளன. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: மூவா் கைது

சென்னையில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அ.அக்பா்பாஷா (42). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு: இருவா் கைது

சென்னை சூளையில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை கெல்லீஸ் பராக்கா சாலை பகுதியைச் சோ்ந்தவா் சு.அனுஜ் (50). இவா் சூளை டிகே முதலி தெருவ... மேலும் பார்க்க

தமிழக உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த சென்னை ஐஐடி- டிஎன்ஏபெக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழகத்தின் வேளாண் - உணவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்துடன் (டிஎன்ஏபெக்ஸ்) சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் இயந்திர கற்றல் செயல்பாட்டு பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத்... மேலும் பார்க்க

காரிடாா் விழுந்து விபத்து சம்பவம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது மெட்ரோ ரயில்வே நிா்வாகம்

போரூா் - நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில்வே பணியின் போது கான்கிரீட் காரிடாா் விழுந்து ஒருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. சென்னையில... மேலும் பார்க்க