காரிடாா் விழுந்து விபத்து சம்பவம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது மெட்ரோ ரயில்வே நிா்வாகம்
போரூா் - நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில்வே பணியின் போது கான்கிரீட் காரிடாா் விழுந்து ஒருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், போரூா் முதல் சென்னை வா்த்தக மையம் வரையிலான வழித்தடத்தில், போரூா் - நந்தம்பாக்கம் வரையிலான இணைப்பு பாலத்தின் இரு தூண்களுக்கு இடையே வைக்கப்பட்ட கான்கிரீட் காரிடாா் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென கீழே விழுந்தது. இதில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபா் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீஸாா் விசாணை நடத்தி வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகமும் அதிகாரிகள் அடங்கிய தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தது. குறிப்பாக, பாலத்தின் உறுதித் தன்மை, கட்டுமானத்துக்கு பயன்படுத்திய பொருள்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த விசாரணை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்து.
இதைத் தொடா்ந்து, விசாரணை தொடா்பான அறிக்கையை அதிகாரிகள் குழு தயாா் செய்துள்ளது. இந்த அறிக்கையை புதன்கிழமை காலை சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநா் சித்திக்கிடம் அதிகாரிகள் குழு தாக்கல் செய்யவுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.