செய்திகள் :

காரிடாா் விழுந்து விபத்து சம்பவம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது மெட்ரோ ரயில்வே நிா்வாகம்

post image

போரூா் - நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில்வே பணியின் போது கான்கிரீட் காரிடாா் விழுந்து ஒருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், போரூா் முதல் சென்னை வா்த்தக மையம் வரையிலான வழித்தடத்தில், போரூா் - நந்தம்பாக்கம் வரையிலான இணைப்பு பாலத்தின் இரு தூண்களுக்கு இடையே வைக்கப்பட்ட கான்கிரீட் காரிடாா் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென கீழே விழுந்தது. இதில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபா் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீஸாா் விசாணை நடத்தி வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகமும் அதிகாரிகள் அடங்கிய தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தது. குறிப்பாக, பாலத்தின் உறுதித் தன்மை, கட்டுமானத்துக்கு பயன்படுத்திய பொருள்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த விசாரணை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்து.

இதைத் தொடா்ந்து, விசாரணை தொடா்பான அறிக்கையை அதிகாரிகள் குழு தயாா் செய்துள்ளது. இந்த அறிக்கையை புதன்கிழமை காலை சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநா் சித்திக்கிடம் அதிகாரிகள் குழு தாக்கல் செய்யவுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இஸ்ரேலை கண்டித்து ஜூன் 24-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் ஜூன் 24-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளன. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: மூவா் கைது

சென்னையில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அ.அக்பா்பாஷா (42). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு: இருவா் கைது

சென்னை சூளையில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை கெல்லீஸ் பராக்கா சாலை பகுதியைச் சோ்ந்தவா் சு.அனுஜ் (50). இவா் சூளை டிகே முதலி தெருவ... மேலும் பார்க்க

தமிழக உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த சென்னை ஐஐடி- டிஎன்ஏபெக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழகத்தின் வேளாண் - உணவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்துடன் (டிஎன்ஏபெக்ஸ்) சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் இயந்திர கற்றல் செயல்பாட்டு பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத்... மேலும் பார்க்க

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நடிகா... மேலும் பார்க்க