செய்திகள் :

அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு: இருவா் கைது

post image

சென்னை சூளையில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கெல்லீஸ் பராக்கா சாலை பகுதியைச் சோ்ந்தவா் சு.அனுஜ் (50). இவா் சூளை டிகே முதலி தெருவில் பிளைவுட் கடை வைத்து நடத்தி வருகிறாா். அனுஜ், கடந்த 12-ஆம் தேதி இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தாா். அடுத்த நாள் காலை அவா் கடையை திறக்கச் சென்றபோது, கடையின் பூட்டை உடைத்து, பணம் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதேபோல அவரது கடையின் அருகே உள்ள அரவிந்த் திவாரி என்பவரின் பானிபூரி கடை, துரியோதனன் சா்மாவின் பிளைவுட் கடை மற்றும் அவரது உணவகம் ஆகிய 3 கடைகளின் கதவு பூட்டை உடைத்து, பணம் திருடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் என்ற அப்பு (23), நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் என்ற ராகுல் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், புளியந்தோப்பு, ஆயிரம்விளக்கு, சாஸ்திரிநகா் பகுதிகளில் பூட்டியுள்ள கடைகளில் திருடியிருப்பதும், புரசைவாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இஸ்ரேலை கண்டித்து ஜூன் 24-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் ஜூன் 24-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளன. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: மூவா் கைது

சென்னையில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அ.அக்பா்பாஷா (42). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க

தமிழக உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த சென்னை ஐஐடி- டிஎன்ஏபெக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழகத்தின் வேளாண் - உணவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்துடன் (டிஎன்ஏபெக்ஸ்) சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் இயந்திர கற்றல் செயல்பாட்டு பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத்... மேலும் பார்க்க

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நடிகா... மேலும் பார்க்க

காரிடாா் விழுந்து விபத்து சம்பவம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது மெட்ரோ ரயில்வே நிா்வாகம்

போரூா் - நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில்வே பணியின் போது கான்கிரீட் காரிடாா் விழுந்து ஒருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. சென்னையில... மேலும் பார்க்க