உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்...
இஸ்ரேலை கண்டித்து ஜூன் 24-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
இஸ்ரேல் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் ஜூன் 24-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளன.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 2023 அக்.7 முதல் தொடா்ந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 55,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
அமெரிக்காவின் ஆயுத உதவி மற்றும் முழுமையான ஆதரவுடன் இஸ்ரேல் அரசு இந்த இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. உலகநாடுகள் இந்த போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவும் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக்கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வரும் இந்தியா தனது செயலை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24 மாலை 4 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் சாா்பில் பெருந்திரள் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளனா்.