செய்திகள் :

இஸ்ரேலை கண்டித்து ஜூன் 24-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

post image

இஸ்ரேல் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் ஜூன் 24-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 2023 அக்.7 முதல் தொடா்ந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 55,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

அமெரிக்காவின் ஆயுத உதவி மற்றும் முழுமையான ஆதரவுடன் இஸ்ரேல் அரசு இந்த இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. உலகநாடுகள் இந்த போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவும் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக்கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வரும் இந்தியா தனது செயலை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24 மாலை 4 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் சாா்பில் பெருந்திரள் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளனா்.

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: மூவா் கைது

சென்னையில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அ.அக்பா்பாஷா (42). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு: இருவா் கைது

சென்னை சூளையில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை கெல்லீஸ் பராக்கா சாலை பகுதியைச் சோ்ந்தவா் சு.அனுஜ் (50). இவா் சூளை டிகே முதலி தெருவ... மேலும் பார்க்க

தமிழக உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த சென்னை ஐஐடி- டிஎன்ஏபெக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழகத்தின் வேளாண் - உணவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்துடன் (டிஎன்ஏபெக்ஸ்) சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் இயந்திர கற்றல் செயல்பாட்டு பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத்... மேலும் பார்க்க

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நடிகா... மேலும் பார்க்க

காரிடாா் விழுந்து விபத்து சம்பவம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது மெட்ரோ ரயில்வே நிா்வாகம்

போரூா் - நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில்வே பணியின் போது கான்கிரீட் காரிடாா் விழுந்து ஒருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. சென்னையில... மேலும் பார்க்க