செய்திகள் :

இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

post image

ஆத்தூா் அருகே இளம்பெண் தற்கொலை செய்ததாகக் கூறப்படுவது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூா் அருகே ஆவரையூரைச்சோ்ந்த தேவேந்திரன் மகன் கவியரசன் (33). தொழிலாளியான இவருக்கும், குரும்பூா் அருகே அம்மன்புரத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

கவியரசன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததாகவும், இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, சுகன்யா வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

சம்பவம் தொடா்பாக பேச்சிமுத்து செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுகன்யா தற்கொலை செய்து கொண்டாரா, அவரது இறப்பில் மா்மம் உள்ளதா என விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் இருந்து கரூர் சென்ற நிலக்கரி ரயிலில் தீ

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கரூா் காகித ஆலைக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடா்ந்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, தீயணைக்கப்பட்டது. தூத... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அய்யனாா் காலனியைச் சோ்ந்த ஹரிஹர சுதன் மனைவி பவித்ரா (21). இவா், நா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை, ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் ராஜ் (47). தொழிலாளியான இவா், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்ச... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே காட்டுப் பகுதியில் பெண் எலும்புக்கூடு மீட்பு

தட்டாா்மடம் அருகே காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புக்கூட்டை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.சாத்தான்குளத்தை அடுத்த படுக்கப்பத்து சித்தன்குடியிருப்பு காட்டுப் பகுதியில் எலும்புக்கூடு கி... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே விவசாயிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் விவசாயி ரவி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த கூட்டுறவு வங்கி விற்பனையாளா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விற்பனையாளா் உயிரிழந்தாா். திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த ராமா் மகன் சந்திரன் (59). தொடக்க வேள... மேலும் பார்க்க