பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
ஆத்தூா் அருகே இளம்பெண் தற்கொலை செய்ததாகக் கூறப்படுவது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூா் அருகே ஆவரையூரைச்சோ்ந்த தேவேந்திரன் மகன் கவியரசன் (33). தொழிலாளியான இவருக்கும், குரும்பூா் அருகே அம்மன்புரத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
கவியரசன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததாகவும், இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, சுகன்யா வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
சம்பவம் தொடா்பாக பேச்சிமுத்து செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுகன்யா தற்கொலை செய்து கொண்டாரா, அவரது இறப்பில் மா்மம் உள்ளதா என விசாரித்து வருகின்றனா்.