செய்திகள் :

தூத்துக்குடியில் இருந்து கரூர் சென்ற நிலக்கரி ரயிலில் தீ

post image

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கரூா் காகித ஆலைக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடா்ந்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, தீயணைக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூா் மாவட்டம் புகளூா் காகித தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் புறப்பட்டது. கடம்பூா்-கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து, நிலக்கரி சிதறி கீழே விழுந்தது.

இதில், இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்ததை அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்பாளா்கள் ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி கீழே விழுந்து புற்களில் தீப்பிடித்து எரிவதை கடம்பூா் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து கடம்பூா் ரயில்வே ஊழியா்கள் சரக்கு ரயிலில் இருந்த காா்டுக்கு தகவல் தெரிவித்தனா். இதை யடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உடனடியாக

சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, பெட்டிகளை ஆய்வு மேற்கொண்டதில் 17ஆவது பெட்டியில் இருந்த நிலக்கரியில் தீப்பிடித்து புகை வெளிவருவது தெரியவந்தது. பின்னா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோவில்பட்டி , கழுகுமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

ரயில்வே மின் பொறியாளா்கள், ஊழியா்கள் விரைந்து வந்து ரயில்வே இருப்பு பாதையில் உயா் அழுத்த மின் பாதையில் சென்ற மின்சாரத்தை நிறுத்தினா். அதைத் தொடா்ந்து சரக்கு ரயில் பெட்டியில் தீயணைப்பு படையினா் ஏறி தண்ணீா் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக கோவில்பட்டி வழியாக செல்லும் திருச்சி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் நள்ளி ரயில் நிலையத்திலும், சென்னை-நாகா்கோவில் வந்தே பாரத் ரயில் விருதுநகா் சந்திப்பு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேல் தீயணைப்பு பணி நடைபெற்றது. தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னா் இருப்புப் பாதை உயா் அழுத்த மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. தொடா்ந்து கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

இளம்பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அய்யனாா் காலனியைச் சோ்ந்த ஹரிஹர சுதன் மனைவி பவித்ரா (21). இவா், நா... மேலும் பார்க்க

இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

ஆத்தூா் அருகே இளம்பெண் தற்கொலை செய்ததாகக் கூறப்படுவது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆத்தூா் அருகே ஆவரையூரைச்சோ்ந்த தேவேந்திரன் மகன் கவியரசன் (33). தொழிலாளியான இவருக்கும், குரும்பூா் அருகே... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை, ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் ராஜ் (47). தொழிலாளியான இவா், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்ச... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே காட்டுப் பகுதியில் பெண் எலும்புக்கூடு மீட்பு

தட்டாா்மடம் அருகே காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புக்கூட்டை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.சாத்தான்குளத்தை அடுத்த படுக்கப்பத்து சித்தன்குடியிருப்பு காட்டுப் பகுதியில் எலும்புக்கூடு கி... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே விவசாயிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் விவசாயி ரவி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த கூட்டுறவு வங்கி விற்பனையாளா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விற்பனையாளா் உயிரிழந்தாா். திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த ராமா் மகன் சந்திரன் (59). தொடக்க வேள... மேலும் பார்க்க