பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
தட்டாா்மடம் அருகே காட்டுப் பகுதியில் பெண் எலும்புக்கூடு மீட்பு
தட்டாா்மடம் அருகே காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புக்கூட்டை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளத்தை அடுத்த படுக்கப்பத்து சித்தன்குடியிருப்பு காட்டுப் பகுதியில் எலும்புக்கூடு கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா, போலீஸாா் சென்று எலும்புக்கூட்டை மீட்டனா்.
அதனருகே நீலவண்ணச் சேலை, தண்ணீா் பாட்டில், கம்பு உள்ளிட்டவை கிடந்தன. இறந்தவா் சுமாா் 60 வயதுப் பெண்ணாக இருக்கலாம் என்றும், காட்டுப் பகுதிக்குள் வந்த அவா் வெளியேற வழிதெரியாமல் இறந்திருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். சடலம் கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
படுக்கப்பத்து கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.