செய்திகள் :

மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிப் பொய் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

post image

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பொய்யான மற்றும் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

நாட்டில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக, இதுகுறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 4-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், தற்போது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அரசின் அறிவிப்பைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் ஏமாற்று வேலை என்றும், இந்த கணக்கெடுப்பில் சாதியைச் சேர்ப்பது குறித்து மௌனம் காத்து வருவதாகவும், இது அரசின் மற்றொரு தலைகீழ் திருப்பமா என்றும் திங்களன்று கேள்வி எழுப்பியது.

இதற்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

காங்கிரஸ் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், பொய்யான கூற்றுகளால் மக்களைத் தவறாக வழிநடத்துகிறது. இதுபோன்ற அற்ப செயலை மேற்கொள்வதன் மூலம் எதிர்க்கட்சியின் முக்கிய நோக்கம் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெற விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸின் நோக்கம் சரிந்துவருவதால் பொய்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசு வெளியிட்ட அறிவிக்கையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மறைவான, மங்கலான மற்றும் தீய பார்வையால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து மோடி அரசின் முடிவில் திட்டவட்டமாக விளக்கப்பட்டுள்ளதைக் காண முடியவில்லை. காங்கிரஸின் எண்ணங்கள் நிறைவேறவில்லை என்று அவர்கள் உணருவதால், பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் எப்போதும் சாதியின் பெயரால் வாக்கு வங்கி அரசியலைச் செய்து வருகிறது,

ஆனால் பின்தங்கிய சமூகங்களுக்கு எதுவும் தெரியாது என்று திரிவேதி குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க:பேரொளி வீசும் பல்லவர் கட்டுத்தளிகள்! - நூல் அறிமுகம் | விமர்சனம்

6 சர்வதேச விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் இன்று 6 விமானங்களை ரத்து செய்துள்ளது. அமிர்தசரஸ் - லண்டன், தில்லி - துபை இடையே இயக்கப்படும் சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் வ... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை: ரூ.160 கோடி சொத்துகள் முடக்கம்

மும்பை: சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.160 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதா... மேலும் பார்க்க

மேலும் 2 விமானங்கள் இன்று ரத்து: ஏர் இந்தியா

புது தில்லி: தில்லியிலிருந்து பாரீ்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் ஏஐ143 விமானம் இன்று(ஜூன் 17) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து போயிங் ... மேலும் பார்க்க

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு, மாநில விமானப் ப... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!

பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலுள்ள ஏராளமான பூங்காக்கள் மக்களின் வருக... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தினார். மேலும் பார்க்க