20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ
சௌதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வாலீத் விபத்தில் சிக்கி சுமார் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் கண் விழித்துப் பார்த்து, தனது குடும்பத்தாருடன் இணைந்ததாக விடியோக்கள் வைரலாகி வருகிறது.
உறங்கும் இளவரசர் என்று அழைக்கப்படும் அல்-வாலீத், ஒரு சாலை விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்து, கோமா நிலைக்குச் சென்றார்.
சுமார் 20 ஆண்டுகளாக அவர் கோமா நிலையிலேயே வைத்து கவனிக்கப்பட்டு வரும் நிலையில், மிகச் சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கண் விழித்ததாகக் கூறப்படுகிறது.