செய்திகள் :

ஜோக்கர்ஸ் யாரு..? சீண்டிய ஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த தெ.ஆப்பிரிக்கா!

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டியது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா மனம் திறந்துள்ளார்.

முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

மேலும், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐசிசி பட்டத்தை வென்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி சதமடித்த எய்டன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த அணி கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் விளாசியிருந்தார்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான சொற்களை பயன்படுத்தியதாக தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களை ஜோக்கர்ஸ் (Chokers) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாக்குவாதத்தைத் தூண்டும் விதமாக எங்களிடம் சீண்டலில் ஈடுபட்டனர்.

எய்டன் மார்க்ரம் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அவர்களுக்கு (ஆஸ்திரேலிய அணிக்கு) விட்டுகொடுத்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

இறுதிப் போட்டியில் பலர் எங்களை நம்பினார்கள். பலர் எங்கள் மீது சந்தேகப்பட்டனர். நாங்கள் பல்வேறு நம்பிக்கைகளுடனும், சந்தேகங்களுடன் விளையாட வந்தோம். இந்த வெற்றியின் மூலம் அந்த சந்தேகங்களை எல்லாம் நாங்கள் தற்போது தவிடு பொடி ஆக்கியுள்ளோம்.

பல்வேறு பிரிவுகளாகக் பிரிந்து கிடக்கும் நாட்டில் ஒன்றிணைவதற்கு இதுவே சரியான நேரம் எனக் கருதுகிறோம். இது நம் நாட்டை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். நிறைய சந்தேகங்கள் இருந்தன. ஆனால் நாங்கள் விளையாடிய விதம் அதையெல்லாம் அழித்திருக்கும்” என்றார்.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் நியூசி. கேப்டன்!

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ வைரலாகி வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா வென்றது. 27 ஆண்... மேலும் பார்க்க

பிரதமருக்கு அடுத்து செல்வாக்கு மிகுந்த நபர்கள் வரிசையில் ஷுப்மன் கில்: ஜோஸ் பட்லர்

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க

5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி..! லக்னௌ அணி உரிமையாளர் பகிர்ந்த விடியோ!

லக்னௌ அணி வீரர் திக்வேஷ் ரதி உள்ளூர் டி20 போட்டியில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது வைரலாகி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ அணியில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி தனது சிறப்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா!

ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசி... மேலும் பார்க்க

பிக்-பாஸ் தொடரில் விளையாட பதிவு செய்த இந்திய வீரர்!

ஆஸ்திரேலியாவில் பிரபலமான லீக் தொடரான பிக்-பாஸ் தொடரில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரும் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போலவே உலகம் மு... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் நியூசி. கேப்டன்!

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் நியூசிலாந்து மகளிரணி கேப்டன் சோஃபி டிவைன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.13-வது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர... மேலும் பார்க்க