செய்திகள் :

ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் நியூசி. கேப்டன்!

post image

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் நியூசிலாந்து மகளிரணி கேப்டன் சோஃபி டிவைன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

13-வது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 30 முதல் நவம்பா் 2 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் மட்டும், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நடத்தும் இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக நியூசிலாந்து மகளிரணி கேப்டன் சோஃபி டிவைன் அறிவித்திருக்கிறார்.

35 வயதான சோஃபி டிவைன் ஒருநாள் போட்டிகளில் மிகவும் பிரபலமான ஆல்ரவுண்டராகக் கருதப்படுகிறது. இதுவரை 152 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3990 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, 107 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 8 சதங்களும் விளாசியிருக்கிறார்.

பேட்டிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் அசத்தியுள்ள சோஃபி, 146 டி20 போட்டிகளில் விளையாடி 3431 ரன்களும், 119 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு தனது 16-வது வயதில் நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான சோஃபி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “விலகுவதற்கான சரியான நேரம் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். நியூசிலாந்து அணியில் விளையாடியதைப் பெருமையானதாகக் கருதுகிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன்” என்றார்.

2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட சோஃபி டிவைன், 2022 ஆம் ஆண்டில் அணியை வழிநடத்தி வென்றது மட்டுமின்றி, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையையும் வென்றுகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

பிரதமருக்கு அடுத்து செல்வாக்கு மிகுந்த நபர்கள் வரிசையில் ஷுப்மன் கில்: ஜோஸ் பட்லர்

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க

5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி..! லக்னௌ அணி உரிமையாளர் பகிர்ந்த விடியோ!

லக்னௌ அணி வீரர் திக்வேஷ் ரதி உள்ளூர் டி20 போட்டியில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது வைரலாகி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ அணியில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி தனது சிறப்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா!

ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசி... மேலும் பார்க்க

பிக்-பாஸ் தொடரில் விளையாட பதிவு செய்த இந்திய வீரர்!

ஆஸ்திரேலியாவில் பிரபலமான லீக் தொடரான பிக்-பாஸ் தொடரில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரும் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போலவே உலகம் மு... மேலும் பார்க்க

ஜோக்கர்ஸ் யாரு..? சீண்டிய ஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த தெ.ஆப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டியது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா மனம் திறந்துள்ளார். முன்னாள் சாம்பியனான ஆஸ்தி... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இவர்கள் இருவரும் வேண்டும்: ஹர்பஜன் சிங்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிக... மேலும் பார்க்க