செய்திகள் :

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

post image

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

தேனிலவுக்கான முழு ஏற்பாட்டையும் செய்த மனைவி சோனம், தனது காதலுடன் இணைந்து மேகாலயாவில் வைத்து கணவரைக் கொலை செய்தார்.

காவல்துறையின் விசாரணையில் ராஜா ரகுவன்ஷியை, சோனம் மற்றும் அவரது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் இணைந்து 3 இளைஞர்கள் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜாவுக்கு சோனம் மாந்திரீகம்

”ராஜா ரகுவன்ஷிக்கு சோனம் மாந்திரீகம் செய்து வைத்ததாக அவரின் தந்தை அசோக் ரகுவன்ஷி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “திருமணமானவுடன் ஒரு முடிச்சை ராஜாவுடன் கொடுத்து வீட்டின் முன்பகுதியில் சோனம் கட்டவைத்தார். வீட்டில் தீய சக்தி அண்டாமல் இருக்க என்று சோனம் தெரிவித்திருந்தார்.

ஆனால், ராஜாவின் கொலைக்கு பிறகு அது எனது மகனுக்கு வைக்கப்பட்ட மாந்திரீகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

தற்போது அந்த முடிச்சு வீட்டின் முன்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜா ரகுவன்ஷியின் தாயார் உமா கூறுகையில், தனது மகன் மற்றும் சோனம் ஜாதகம் செவ்வாய் கிரகத்துடன் ஒத்துப்போனதால் ஜோதிடர் பரிந்துரைத்தபடி, பாரம்பரிய முறையில் திருமணம் நடத்தப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு நான்கு நாள்கள் மட்டுமே சோனம் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். பிறகு முறைப்படி, அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றார். மகிழ்ச்சியுடன் அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.

சோனத்தை எப்போதாவது சந்தித்தால், என் மகனைக் கொன்றது ஏன்? என்ற கேள்வியை மட்டும் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வாக்குமூலம்

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் குறித்து மேகாலயா காவல்துறையினர் வெளியிட்ட தகவலில்,

”இந்த ஒட்டுமொத்தக் கொலைக்கும் பின்னணியில் மூளையாக இருந்தது ராஜ் குஷ்வாஹா என்றும், இந்த கொலைத் திட்டம் இந்தூரில் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷி - சோனம் திருமணத்துக்கு முன்பே கொலைத் திட்டம் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே போட்ட மூன்று திட்டங்கள் கொலையில் முடியாமல், நான்காவது திட்டம்தான் நிறைவேறியதாக குற்றவாளிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, திருமணம் மே மாதம் நடைபெற்ற நிலையில், கொலைத் திட்டம் பிப்ரவரி மாதமே தீட்டப்பட்டிருந்ததும், ஒன்று, ஆற்றில் சோனம் அடித்துச் செல்லப்பட்டதாக நாடகமாடுவது அல்லது, ஒரு பெண்ணைக் கொன்று எரித்துவிட்டு சோனம் என நாடகமாடுவது என்ற திட்டங்களும் கொலைச் சதியில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?

மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிப் பொய் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பொய்யான மற்றும் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிக்கையை மத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!

பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலுள்ள ஏராளமான பூங்காக்கள் மக்களின் வருக... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தினார். மேலும் பார்க்க

ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து ... மேலும் பார்க்க

விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன்... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்ட... மேலும் பார்க்க