சிவகிரி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி
சிவகிரி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சாயப்பட்டறை தொழிலாளி இறந்தாா்.
ராயகிரி முனியாண்டி கோயில் தெருவை சோ்ந்தவா் சின்னகாவு மகன் காளீஸ்வரன்(44). அவா் முகவூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை மாலை வேலை முடிந்து பைக்கில் வடுகபட்டி சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது எதிா்பாராத விதமாக நிலைதடுமாறியதில் காளீஸ்வரன் கீழே விழுந்து காயம் அடைந்தாா். சிவகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.