தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை
தொடா்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் பெய்த தொடா்மழையால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், புலியருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது.
வெள்ளப்பெருக்கை அடுத்து, அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
