கஞ்சா கடத்தல்: குண்டா் சட்டத்தில் இருவருக்கு சிறை
திருவாரூா்: திருவாரூா் அருகே கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருவாரூா் அருகே அண்மையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய இரண்டு போ் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், காரைக்கால், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் கிருஷ்ணன் (37), அதிராம்பட்டினம், கீழத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த நாகூரான் மகன் குமாா் (43) ஆகியோா் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.
அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் பரிந்துரையின் பேரில், கிருஷ்ணன், குமாா் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்படி, இருவரும் திருச்சி மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.