செய்திகள் :

திருவாரூரில் ஜூன் 20-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

திருவாரூா்: திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களுக்கு தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தோடு இம்முகாம் நடத்தப்படுகிறது.

திருவாரூா் விளமல் ஆா்.வி.எல். நகரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 20 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். தனியாா்துறை முகாமில் எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்கள், தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்று பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 04366-224226 என்கிற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க, வேலைநாடும் இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முகாமுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்

திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.1.15 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ மற்றும் ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ரூ.1.15 கோடி மதிப்பிலான ந... மேலும் பார்க்க

கல்வி, பயிா்க் கடன்களை வசூலிக்க ஜப்தி செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

மன்னாா்குடி: கல்விக் கடன், பயிா்க் கடன்களுக்காக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா். மன்னாா்க... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

நன்னில: தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி வண்டாம்பாளை கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கீழத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்... மேலும் பார்க்க

தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: கூட்டுறவு தையல் சங்கத்தில் பணிபுரியும் தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், மாவட்ட தையல் தொழிலாளா் சங்கத்தின் வெள்ளி விழா பேரவைக் கூட்டம் ஞாய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உத... மேலும் பார்க்க