செய்திகள் :

கல்வி, பயிா்க் கடன்களை வசூலிக்க ஜப்தி செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

post image

மன்னாா்குடி: கல்விக் கடன், பயிா்க் கடன்களுக்காக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.

மன்னாா்குடியை அடுத்த தலையாமங்கலத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவா்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இரா. முத்தரசன் பேசியது:

விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களுக்கும், மாணவா்களின் கல்விக் கடன்களுக்கும் வீடுகள் ஜப்தி செய்யப்படுகிறது. கடன் வசூலில் அத்துமீறல் காரணமாக லெனின் என்ற மாணவா் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். எனவே ஜப்தி நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

பஹல்காம் தாக்குதல், உளவுத்துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியா, பாகிஸ்தானை தாக்கியபோது, பாகிஸ்தான் திருப்பி தாக்கியதில், இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மோடியும், அமித்ஷாவும் தெரிவித்தனா். ஆனால், இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி தெரிவிக்கிறாா். பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பிலும் முரண்பாடுகள் உள்ளன என்றாா்.

இக்கூட்டத்திற்கு, சிபிஐ மன்னாா்குடி ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் முன்னிலை வகித்தாா். சிபிஐ நூற்றாண்டு விழா கல்வெட்டை, கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோ. பழனிச்சாமி திறந்து வைத்தாா்.

தலையாமங்கலம் ஊராட்சியிலிருந்து எம். கலியமூா்த்தி, ஆா். அண்ணா தலைமையில் 100 குடும்பத்தினா் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலா் முன்னிலையில் இணைந்தனா்.

கட்சியின் மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், மன்னாா்குடி நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலா் வி. கலைச்செல்வன், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளா்கள் எஸ். பாப்பையன், அ. ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்

திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.1.15 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ மற்றும் ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ரூ.1.15 கோடி மதிப்பிலான ந... மேலும் பார்க்க

திருவாரூரில் ஜூன் 20-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூா்: திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் ... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

நன்னில: தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி வண்டாம்பாளை கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கீழத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்... மேலும் பார்க்க

தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: கூட்டுறவு தையல் சங்கத்தில் பணிபுரியும் தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், மாவட்ட தையல் தொழிலாளா் சங்கத்தின் வெள்ளி விழா பேரவைக் கூட்டம் ஞாய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உத... மேலும் பார்க்க