`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர...
குடிநீா் கேட்டு சாலை மறியல்
நன்னில: தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி வண்டாம்பாளை கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கீழத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கடந்த சில தினங்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், கீழத்தெருப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மயிலாடுதுறை திருவாரூா் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது . பொதுமக்கள் சாலை மறியல் செய்த பகுதிக்கு வந்த கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறையினா் விரைவில் தடையின்றி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதிமொழியின் பேரில் சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.